பூரியை ஒருமுறை இப்படி செஞ்சு கொடுங்க.. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.!

225 0

பூரி – கிழங்கு நம்மில் பலருக்கும் பிடித்த காலை உணவில் ஒன்று. எண்ணெய் உணவாக இருந்தாலும் இவற்றை நாம் சப்புக்கொட்டி சாப்பிடுவதை நிறுத்துவதில்லை. ஏனென்றால், அதன் சுவை அப்படி…

அப்படி அனைவருக்கும் பிடித்த பூரியை எப்பவும் போல செய்யாமல் அதன் சுவையை அதிகரித்து சற்று வித்தியாசமாக செய்ய எப்போதாவது நீங்க யோசித்தது உண்டா?.பூரியை ஒருமுறை இப்படி செஞ்சு கொடுங்க.. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.!

குஜராத்தி ஸ்டைலில் இஞ்சி, மிளகாய், ஓமம் என மசாலா பொருட்கள் சேர்த்து சற்று வித்தியாசமான சுவையில் பூரி சுடுவது எப்படி என நாங்கள் கூறுகிறோம்.

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 2 கப்.

ரவை – 1/2 கப்.

கடலை மாவு – 1/2 கப்.

இஞ்சி, பச்சை மிளகாய் விழுது – 1 ஸ்பூன்.

சீரகப்பொடி – 1/2 ஸ்பூன்.

தனியா பொடி – 1/2 ஸ்பூன்.

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

கரம் மசாலா – 1/2 ஸ்பூன்.

மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்.

மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்.

சீரகம் – 1/2 ஸ்பூன்.

ஓமம் – 1/2 ஸ்பூன்.

கஸ்தூரி மேத்தி – 1/2 ஸ்பூன்.

கொத்தமல்லி தழை – ஒரு கொத்து

செய்முறை :

முதலில், பூரி செய்ய எடுத்துக்கொண்ட கோதுமை மாவு, கடலை மாவு ஆகியவற்றை ஒரு சல்லடையில் சலித்து தூசி நீக்கி சுத்தம் செய்துக்கொள்ளவும். இப்போது, எடுத்து வைத்துள்ள இஞ்சி மற்றும் பச்சை மிளகாவை ஒரு மிக்சி ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

இதை தொடர்ந்து, கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து சூடேற்றுங்கள். இதில், அரை கப் ரவை சேர்த்து, பொன்னிறமாக வறுத்து தனியே ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.

தற்போது இந்த பாத்திரத்தில், சலித்து வைத்த மாவு, இஞ்சி – பச்சை மிளகாய் விழுது, சீரகப்பொடி, தனியாப்பொடி, கரம் மசாலா, சீரகம், ஓமம், கஸ்தூரி மேத்தி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும்.

தொடர்ந்து இதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை தொடர்ந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு மாவினை பிசைந்து 30 நிமிடத்திற்கு ஊற வைக்கவும்.

பூரி சுட்டு எடுக்க கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் நன்கு கொதிக்கும் நிலையில் இதில் பூரி மாவினை தட்டையாக உருட்டி போட்டு, சுட்டு எடுக்க மசாலா பூரி தயார்.

மசாலா பொருட்கள் சேர்த்து தயார் செய்த இந்த பூரியினை நாம் அப்படியே சாப்பிடலாம். விருப்பம் உள்ளவர்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் சட்னி, கிழங்கு மற்றும் சாம்பார் சேர்த்து இந்த பூரியை பரிமாறலாம்.

Related Post

கோடை காலத்தில் இந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுங்க.. ஈசியா சமாளிச்சிடலாம்..!

Posted by - February 26, 2024 0
கோடைக் காலத்தில் அனல், அரிப்பு, வியர்வை, சோர்வு என பல தொல்லைகளிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி என  மருத்துவர் கூறும் விளக்கங்களை பார்க்கலாம். கோடைக் காலம்…

மார்கழியில் ஏன் திருமணம் செய்வதில்லை தெரியுமா?

Posted by - December 30, 2022 0
Margazhi month 2022 | மார்கழி மாதத்தில் பயிர் வளரும் காலமாகும். இந்த மாதத்தில் விதை விதைப்பதில்லை. அதனால்தான் வம்ச விருத்திக்காக செய்யப்படும் திருமணமும் இந்த மாதம்…

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகிய நடிகர்?

Posted by - April 20, 2023 0
முல்லை வளைகாப்பிலாவது பிரிந்த குடும்பம் ஒன்று சேருமா என காத்திருக்கிறார்கள் பார்வையாளர்கள்.   விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நிறைய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி…

டீ டைமிற்கு ஏற்ற முட்டை போண்டா .. உங்களுக்கான ரெசிபி டிப்ஸ்.!

Posted by - April 10, 2023 0
முட்டையை வேக வைத்து, பஜ்ஜி மாவு தயாரித்து செய்யும் இந்த முட்டை போண்டா வித்தியாசமாக நல்ல சுவையுடன் இருக்கும். இந்த முட்டை போண்டாவை எளிதாக எப்படி செய்வது…

சும்மா வாய்க்கு வருவதை சொல்ல கூடாது – ப்ளூ சட்டை மாறனை சாடிய டாப் 10 மூவிஸ் சுரேஷ்குமார்

Posted by - January 6, 2023 0
சன் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற ஒரு நிகழ்ச்சி தான் “டாப் 10 மூவிஸ்”. இந்த நிகழ்ச்சியை சுரேஷ்குமார். இவர் சன் இந்த நடத்தி வந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *