இதனை விட கொடுமையின் உச்சகட்டமாக  சூளகிரியில் உள்ள மருத்துவமனையில் நர்சிங் பயிற்சி பெற்று வரும் கிருஷ்ணனின் மகள் காஞ்சனாவை காணும்  இடமெல்லாம் திட்டி தீர்ப்பதுடன், ஆபாசமாக பேசியும் வருவதை வாடிக்கையாக கொண்டு வருவதாக குமுறுகின்றனர் இந்த ஏழை குடும்பத்தினர்.

இதுகுறித்து உரிய ஆதாரத்துடன் புகார் அளித்தும் போலீசார் மவுனம் காப்பதாக குமுறும் இவர்கள் கட்டப்பாஞ்சாயத்து செய்து தங்கள் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.