திமுக கவுன்சிலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது…!!

359 0

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திமுக கவுன்சிலர் போக்சோ சட்டத்தின்  கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

திமுக நகரமன்ற உறுப்பினர்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பக்கிரிசாமி என்பவர் திமுக நகரமன்ற உறுப்பினராக உள்ளார்.  மேலும், சக்தி நகரில் உள்ள வைத்தியலிங்கா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் தாளாளருமாக இருந்தும் வருகிறார். இவர் இப்பள்ளியில் யூகேஜி படிக்கும் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த கொடூரனின் செயலால் பாதிக்கப்பட்டதை சிறுமி  அவரது பெற்றொரிடம் கூறியுள்ளார்.

தொடர் அலட்சியம்:

இது தொடர்பாக புகார் அளித்தும் பக்கிரிசாமி மீது வழக்கு பதிவு செய்யாமல் மகளிர் போலீசார் அலட்சியம் காட்டி வந்த நிலையில் இந்த விவகாரம் சட்டமன்றத்தில் பூதாகரமாக வெடித்தது.  இதன் தொடர்ச்சியாக திமுக கவுன்சிலர் பக்கிரிசாமியை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.  ஆனால் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்பட்டவில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டிய நிலையில்  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் மாஜி திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி.

சிறையில்:

இதனிடையே பக்கிரிசாமியை  காவல் நிலையத்தில் வைத்து  விசாரிக்காமல்  தனியார் சொகுசு மண்டபத்தில்  வைத்து போலீசார் விசாரணை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விருத்தாசலத்தில் இருந்து அழைத்து சென்று கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய  போலீசார்  பின்னர் நீதிபதி  உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

Related Post

திமுகவையும், காங்கிரஸையும் நிராகரிக்க சென்னை தயாராக உள்ளது : பிரதமர் மோடி

Posted by - April 10, 2024 0
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் ரோட்ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். மக்கள் சேவையில் தொடர்ந்து கடினமாக உழைக்கவும்,…

அதிகாலையில் வந்த அலர்ட்! அடுத்த 3 மணி நேரம்.. சென்னை உட்பட 8 மாவட்டங்களில் மழை இருக்கு- வானிலை மையம்

Posted by - December 6, 2023 0
சென்னை: அடுத்த 3 மணி நேரத்திற்குச் சென்னை உட்பட மொத்தம் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் கடந்த…

கடல் கடந்து காதல்- நார்வே பெண்ணை கரம்பிடித்த கடலூர் வாலிபர்

Posted by - June 30, 2023 0
கடலூர்: கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன். பி.எச்.டி. பட்டதாரியான இவர் நார்வே நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில்…

சூரி முதல் விஜயபாஸ்கர் வரை.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமாடிய விஐபிக்களின் காளைகள்…!

Posted by - January 18, 2023 0
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களமிறங்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சூரி உள்ளிட்டோரின் காளைகள் வெற்றிபெற்றன. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.…

வாட்டி வதைக்கப்போகும் வெயில்..! மக்களே உஷார்

Posted by - April 11, 2023 0
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 5…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *