சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஒருவர் என்னை தொடர்பு கொண்டார் – பிசிசிஐயில் முகமது சிராஜ் புகார்

218 0

அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர், விசாகப்பட்டினம் அருகே அந்த நபரை கைது செய்தனர்.

சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஒருவர் அணியின் உள் விவகாரங்கள், வியூகங்கள் குறித்து பெங்களுர் அணியின் பவுலர் முகமது சிராஜிடம் கேட்டதாக, பிசிசிஐ-யிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, இந்திய அணி ஆஸ்திரேலியாவிடன் ஒரு நாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போது, ஹைதராபாத்தை சேர்ந்த ஓட்டுநர் ஒருவர், தான் சூதாட்டத்தில் அதிக அளவில் பணத்தை இழந்ததால், முகமது சிராஜை வாட்ஸாப் மூலமாக தொடர்பு கொண்டுள்ளார்.

அந்த மெசேஜ்ஜில் அவர், தான் சூதாட்டத்தில் நிறைய பணத்தை இழந்ததால் இந்திய அணியின் விவகாரங்களை தெரிவித்து தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மெசேஜ் வந்ததையடுத்து, முகமது சிராஜ் பிசிசிஐ-யின் ஊழல் தடுப்புக் குழுவினரிடம் புகார் அளித்தார்.

 

இதையடுத்து, பிசிசிஐ சைபர் போலிசாரின் உதவியை நாடியது. அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர், விசாகப்பட்டினம் அருகே அந்த நபரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், சிராஜை தொடர்பு கொண்டவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஓட்டுநர் என்பதும், சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததால், பணத்தை மீட்க சிராஜிடம் உதவி கோரியதும் தெரியவந்துள்ளது.

மேலும், அவர் எந்த எந்த கும்பலுடனும் தொடர்பில் இல்லை என்பதும், அவர் மீது கடந்த காலங்களிலும் குற்றச்சாட்டுகள் இல்லை எனவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.

Related Post

நான் ஃபினிஷர் தான்டா..! தோனியின் 5 வருட காத்திருப்பு, மூச்சு விடும் சென்னை – ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் மாற்றம் என்ன?

Posted by - April 15, 2025 0
தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த சென்னை அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி…

கடைசி பந்து வரை நீடித்த பரபரப்பான ஆட்டம்…

Posted by - May 1, 2023 0
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்திருந்தது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பஞ்சாப்…

கலக்கிய ப்ராஸ்வெல்! சொதப்பிய வேகம், மிரட்டிய சுழல்! கோப்பையை வெல்ல டார்கெட் என்ன?

Posted by - March 9, 2025 0
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி மகுடம் சூடுவதற்கு நியூசிலாந்து அணி 252 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ஒரு மாத காலமாக நடந்து வந்த சாம்பியன்ஸ் டிராபி…

சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் தோல்வி! சோகத்தில் ரசிகர்கள்!

Posted by - April 9, 2025 0
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 22-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்…

18 வருட காத்திருப்பு ஓவர் -? ஃபைனலில் பெங்களூரு – பஞ்சாப்

Posted by - June 2, 2025 0
18 வருட காத்திருப்பை முடித்து முதல் கோப்பையை வெல்லப்போவாது யார் என்பது? பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை பந்தாடிய பஞ்சாப்: நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *