சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஒருவர் என்னை தொடர்பு கொண்டார் – பிசிசிஐயில் முகமது சிராஜ் புகார்

209 0

அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர், விசாகப்பட்டினம் அருகே அந்த நபரை கைது செய்தனர்.

சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஒருவர் அணியின் உள் விவகாரங்கள், வியூகங்கள் குறித்து பெங்களுர் அணியின் பவுலர் முகமது சிராஜிடம் கேட்டதாக, பிசிசிஐ-யிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, இந்திய அணி ஆஸ்திரேலியாவிடன் ஒரு நாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போது, ஹைதராபாத்தை சேர்ந்த ஓட்டுநர் ஒருவர், தான் சூதாட்டத்தில் அதிக அளவில் பணத்தை இழந்ததால், முகமது சிராஜை வாட்ஸாப் மூலமாக தொடர்பு கொண்டுள்ளார்.

அந்த மெசேஜ்ஜில் அவர், தான் சூதாட்டத்தில் நிறைய பணத்தை இழந்ததால் இந்திய அணியின் விவகாரங்களை தெரிவித்து தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மெசேஜ் வந்ததையடுத்து, முகமது சிராஜ் பிசிசிஐ-யின் ஊழல் தடுப்புக் குழுவினரிடம் புகார் அளித்தார்.

 

இதையடுத்து, பிசிசிஐ சைபர் போலிசாரின் உதவியை நாடியது. அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர், விசாகப்பட்டினம் அருகே அந்த நபரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், சிராஜை தொடர்பு கொண்டவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஓட்டுநர் என்பதும், சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததால், பணத்தை மீட்க சிராஜிடம் உதவி கோரியதும் தெரியவந்துள்ளது.

மேலும், அவர் எந்த எந்த கும்பலுடனும் தொடர்பில் இல்லை என்பதும், அவர் மீது கடந்த காலங்களிலும் குற்றச்சாட்டுகள் இல்லை எனவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.

Related Post

தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த ரவீந்திர ஜடேஜா….Sorry சர்பராஸ் கான்

Posted by - February 16, 2024 0
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், பட்டிதார் ஆகியோர் சொற்ப ரன்களில்…

கோட்டைவிட்ட வீரர்கள்… டிராவில் முடிந்த மொராக்கோ-குரோஷியா ஆட்டம் .

Posted by - November 23, 2022 0
இரு தரப்பிலும் தீவிரமான தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். சமனில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று குரூப்-எப்…

கலக்கிய ப்ராஸ்வெல்! சொதப்பிய வேகம், மிரட்டிய சுழல்! கோப்பையை வெல்ல டார்கெட் என்ன?

Posted by - March 9, 2025 0
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி மகுடம் சூடுவதற்கு நியூசிலாந்து அணி 252 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ஒரு மாத காலமாக நடந்து வந்த சாம்பியன்ஸ் டிராபி…

பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுப்பு – நடந்தது என்ன?

Posted by - September 15, 2025 0
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பைப் போட்டியை இந்திய அணிப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களை மறுத்து, பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால், டாஸின்போது…

மார்ச் 22-இல் IPL போட்டிகள் தொடக்கம்… முதல் 21 மேட்ச்சுக்கான அட்டவணை வெளியானது!!

Posted by - February 23, 2024 0
மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டி சென்னையில் மாலை 6.30-க்கு நடைபெறுகிறது. இந்த மேட்ச்சில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் 2024…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *