சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஒருவர் என்னை தொடர்பு கொண்டார் – பிசிசிஐயில் முகமது சிராஜ் புகார்

217 0

அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர், விசாகப்பட்டினம் அருகே அந்த நபரை கைது செய்தனர்.

சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஒருவர் அணியின் உள் விவகாரங்கள், வியூகங்கள் குறித்து பெங்களுர் அணியின் பவுலர் முகமது சிராஜிடம் கேட்டதாக, பிசிசிஐ-யிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, இந்திய அணி ஆஸ்திரேலியாவிடன் ஒரு நாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போது, ஹைதராபாத்தை சேர்ந்த ஓட்டுநர் ஒருவர், தான் சூதாட்டத்தில் அதிக அளவில் பணத்தை இழந்ததால், முகமது சிராஜை வாட்ஸாப் மூலமாக தொடர்பு கொண்டுள்ளார்.

அந்த மெசேஜ்ஜில் அவர், தான் சூதாட்டத்தில் நிறைய பணத்தை இழந்ததால் இந்திய அணியின் விவகாரங்களை தெரிவித்து தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மெசேஜ் வந்ததையடுத்து, முகமது சிராஜ் பிசிசிஐ-யின் ஊழல் தடுப்புக் குழுவினரிடம் புகார் அளித்தார்.

 

இதையடுத்து, பிசிசிஐ சைபர் போலிசாரின் உதவியை நாடியது. அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர், விசாகப்பட்டினம் அருகே அந்த நபரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், சிராஜை தொடர்பு கொண்டவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஓட்டுநர் என்பதும், சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததால், பணத்தை மீட்க சிராஜிடம் உதவி கோரியதும் தெரியவந்துள்ளது.

மேலும், அவர் எந்த எந்த கும்பலுடனும் தொடர்பில் இல்லை என்பதும், அவர் மீது கடந்த காலங்களிலும் குற்றச்சாட்டுகள் இல்லை எனவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.

Related Post

சொந்த மண் சோகத்திற்கு முடிவு கட்டிய குருணல், ஹேசில்வுட்! த்ரில் போட்டியில் ஆர்சிபி அபார வெற்றி!

Posted by - April 25, 2025 0
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆர்சிபி சொந்த மண்ணில் முதல் வெற்றியை இந்த தொடரில் பதிவு செய்துள்ளது. சின்னசாமி மைதானத்தில்…

ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. சூப்பர் ஓவர் த்ரில்.. ஸ்டார்க்கால் டெல்லி அபார வெற்றி

Posted by - April 17, 2025 0
ராஜஸ்தான் – டெல்லி அணி ஆடிய போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்ற நிலையில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் இன்று நடந்த போட்டியில்…

பாகிஸ்தானின் பரிதாபம்.. போற போக்கில் வெற்றி பெற்ற இந்தியா!

Posted by - February 16, 2026 0
டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்தியா. இதனால், சூப்பர் 8 சுற்றில் இந்தியா கால்தடம் பதித்தது. IND vs PAK…

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது SRH அணி

Posted by - May 3, 2024 0
பரபரப்பாக நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் அபாரமாக ஆடிய சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் அணியை 1 ரன் வித்தியாசத்தில்…

வருண் Vs கோலி – பெங்களூருவை பந்தாடும் கொல்கத்தா..! நேருக்கு நேர், படிதார் சாதிப்பாரா?

Posted by - March 22, 2025 0
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *