ஒரு சிலரை தவிர மற்றவர்கள் வந்தால் கட்சியில் சேர்த்துக் கொள்வோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, எப்போது தேர்தல் வந்தாலும், அதிமுக வெற்றி பெறும் என்று கூறினார். மேலும் திமுகவின் கைப்பாவையாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
இதனிடையே கட்சியில் யார் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று நியூஸ் 18க்கு எடப்பாடி பழனிசாமி பிரத்யேக பதில் அளித்தார். ஒரு சிலரை தவிர மற்றவர்கள் வந்தால் கட்சியில் சேர்த்துக் கொள்வோம் என்று அவர் கூறினார். திமுகவை எதிர்க்க திராணி உள்ள ஒரே கட்சி அதிமுக தான் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதனிடையே சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் விவகாரம் குறித்து சபாநாயகருக்கு மீண்டும் மனு அளிக்கப்படும் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அவர் நல்ல முடிவெடுப்பார் என்று நம்புவதாக தெரிவித்தார்.