ப்ளே ஆஃப் சுற்றை உறுதிசெய்யுமா சென்னை?

235 0

சென்னை அணியைப் போன்றே, 15 புள்ளிகளைப் பெற்றுள்ள லக்னோ அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்று பிளேஆப் சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்தும் முனைப்பில் உள்ளது.

ஐபிஎல் ப்ளே-ஆப் சுற்றுக்கான போட்டி சூடுபிடித்துள்ள நிலையில், இன்று டெல்லி அணியுடன் சென்னை அணி பலப்பரீட்சை நடத்துகிறது.

13 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. மும்பை, பெங்களூரு, லக்னோ உள்ளிட்ட அணிகளும் பிளே-ஆப் வாய்ப்பில் நீடிப்பதால் சென்னை அணி இந்தப் போட்டியில் வெற்றி பெறவேண்டியது கட்டாயத்தில் உள்ளது.

வெற்றிபெறும் பட்சத்தில், 2-வது இடத்தை உறுதிசெய்யவும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஒருவேளை தோல்வி அடைந்தால், மற்ற போட்டிகளின் முடிவுகளைப் பொறுத்தே சென்னை அணியின் தலைவிதி தீர்மானிக்கப்படும்.டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இதேபோன்று, இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் மற்றொரு போட்டியில் லக்னோ அணி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.

சென்னை அணியைப் போன்றே, 15 புள்ளிகளைப் பெற்றுள்ள லக்னோ அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்று பிளேஆப் சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்தும் முனைப்பில் உள்ளது. சென்னை, லக்னோ அணிகள் ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்பதை இன்றைய நாள் தீர்மானிக்கும் என்பதால், இந்த இரு போட்டிகளும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Related Post

இது வெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இல்லை..இது ஒரு விக்ரமன் சார் படம் தான்!

Posted by - May 30, 2023 0
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வெற்றிகரமாக வலம் வருவதற்கு காரணம் என்ன என்று பல வீரர்களிடம் கேட்டாலும் அவர்கள் சொல்லும் ஒரே பதில் சிஎஸ்கே ஒரு அணி…

அகமதாபாத்தில் இன்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு… வெதர் மேன் சொன்ன வானிலை தகவலால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி

Posted by - May 29, 2023 0
16 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை நிலவரங்கள் கூறும் நிலையில் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 16-ஆவது ஐபிஎல்…

கைகுலுக்காத இந்தியா.. எங்க ஊர் பக்கமே வரக்கூடாது – நடுவர் மீது ஐசிசியில் எகிறும் பாகிஸ்தான்..

Posted by - September 16, 2025 0
ஐசிசி தங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், ஆசியக் கோப்பை போட்டியிலிருந்து உடனடியாக விலகுவோம் என, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டியுள்ளது. இந்திய அணி உடனான போட்டியின் நடுவராக செயல்பட்ட…

சென்னை ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சிஎஸ்கே சிஇஓ! – தோனி குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

Posted by - May 24, 2024 0
தோனி தனது ஓய்வு குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட கூடும் என்று இணையத்தில் தகவல்கள் பரவி உள்ளன. 2025 ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவார் என்று…

5-ஆவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்!!

Posted by - May 30, 2023 0
முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *