உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34 லட்சம் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

212 0

இந்த பணத்தை பெற்றதற்கான நியாயப்பூர்வமான காரணங்கள் எதையும்  அறக்கட்டளையின் நிர்வாகிகளால் தெரிவிக்க இயலவில்லை

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் இருந்த 34 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

சென்னை காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில், பணம் முறைகேடு செய்த கல்லால் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறை சோதனை நடத்தியது. லைக்கா நிறுவனம் தனது புகார் மனுவில் 114.27 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை கல்லால் குழுமம்  மோசடி செய்ததாக தெரிவித்திருந்தது. ஆனால், அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில் மோசடி பணத்தின் மதிப்பு மட்டும் ரூ.300 கோடியாக இருக்கும் என்று தெரியவந்தது.

மேலும், தொடர்ந்து நடத்திய விசாரணையில்  பல்வேறு சட்ட விரோத சொத்துக்கள் குறித்த ஆவணங்கள் (Suspicious Cash and Hawala Transaction) கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக மேல் விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, விசாரணையின் ஒரு பகுதியாக  கடந்த 25.05.2023 அன்று, குற்றம்சாட்டப்பட்டவரின் ரூ.25 கோடி சந்தை மதிப்புள்ள அசையா சொத்துக்களை தற்காலிகமாக அமலாக்கத் துறை முடங்கியுள்ளது. மேலும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 34.7 லட்சம் ரூபாய்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.விசாரணையின் போது, கல்லால் நிறுவனத்திடம் இருந்து உதயநிதி அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணத்தை பெற்றதற்கான நியாயப்பூர்வமான காரணங்கள் எதையும்  அறக்கட்டளையின் நிர்வாகிகளால் தெரிவிக்க இயலவில்லை என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Related Post

“தளபதி டிவி”.. விஜயகாந்த் சேனலை வாங்கும் விஜய்! சுளீர் பிளான்! என்ன நடக்குது?

Posted by - February 9, 2024 0
சென்னை: தமிழக வெற்றி கழகம் சார்பாக புதிய சேனல் தொடங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக இரண்டு திட்டங்களை அவர் கையில் எடுத்துள்ளாராம். நடிகர் விஜய் லோக்சபா…

அன்றே மோசடி செய்த நிகிதா.. அதுவும் அவர் பேர்ல? அஜித்குமார் மரண வழக்கில் புதிய திருப்பம்

Posted by - July 3, 2025 0
2011ல் துணை முதலமைச்சரின் பிஏ-வை வைத்து வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கின் எஃப் ஐஆர் தற்போது வெளியாகியுள்ளது. திருப்புவனம் இளைஞர் அஜித்…

ஆடிஷன் பத்தி அன்றே பேசிய ஸ்ருதி நாராயணன்! என்ன சொன்னாங்க தெரியுமா?

Posted by - March 27, 2025 0
 சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம் ஸ்ருதி நாராயணன் நடிக்க வந்தது எப்படி? என்றும், ஆடிஷன் பற்றியும் பேசியது வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை.…

மாநகர பஸ்களில் அடுத்தடுத்த நிறுத்தங்களின் பெயரை அறிவிக்கும் வசதி- உதயநிதி தொடங்கி வைத்து பயணம்….

Posted by - November 26, 2022 0
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பங்கேற்று பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, போக்குவரத்துத்துறை செயலாளர்…

தூத்துக்குடி மாவட்ட மக்களின் கவனத்திற்கு…

Posted by - December 21, 2023 0
தூத்துக்குடி: வரலாறு காணாத வகையில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *