நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை

216 0

தமிழ்நாடு சட்டப்பேரவையில், ”யார் அந்த சார்” என்ற பேட்சுடன் அதிமுகவினர் வந்த நிலையில் , இன்று திமுகவினர் ”இவன் தான் அந்த சார்” என்ற புகைப்படத்துடன் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவினர் அண்ணா பல்கலை விவகாரத்தை கையில் எடுத்த நிலையில், இன்று திமுகவினர் அண்ணா நகர் வழக்கை கையில் எடுத்துள்ளது , சட்டப்பேரவையில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

’யார் அந்த சார்?” – அதிமுக

இந்த ஆண்டின், முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரானது, ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளிலேயே, ஆளுநர் தனது உரையை புறக்கணித்துச் சென்றது பெரும் பேசுபொருளானது. அதுமட்டுமன்றி  சட்டப்பேரவை தொடங்கியது முதலே,அதிமுகவினர் அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை கையில் எடுத்தனர். குறிப்பாக , அதிமுகவினர் அனைவரும் சட்டையில், யார் அந்த சார் என்ற பேட்சை அணிந்து குரல் எழுப்பினர்.  இதனால், முதல் நாளே எதிர்க்கட்சிகளின் குரலால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

 

முதலமைச்சர் ஸ்டாலின் பதில்:

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மாணவிக்கு சட்டப்படி நியாயம் பெற்றுத்தருவதை தவிர, வேறு எந்த நோக்கமும் தமிழ்நாடு அரசுக்கு கிடையாது; குற்றவாளி யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.  காவல்துறை துரித நடவடிக்கை எடுத்த பின்னரும், முதல் தகவல் அறிக்கை கசிந்ததை குறை சொல்கின்றனர். ஆனால் அதற்கு காரணம் தேசிய தகவல் மையம் தான். அதற்கு அந்த அமைப்பும் விளக்கம் கொடுத்திருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

மேலும், யார் அந்த சார் என்ற எதிர்க்கட்சிகள் கேள்விக்கு பதில் அளிக்கையில், “  உண்மையாகவே எதிர்க்கட்களிடம் ஆதாரம் இருந்தால் சிறப்பு புலனாய்வு குழுவிடம் தெரிவியுங்கள்; அதை தவிர்த்து வீண் விளம்பரத்திற்காக மலிவான செயலில் ஈடுபட வேண்டாம்” என தெரிவித்திருந்தார்.

”இவன்தான் அந்த சார்” – திமுக

ஆனால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து யார் அந்த சார் என்ற பேட்சுடன் வருகை தர ஆரம்பித்தனர்.

 

இந்நிலையில், அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் , குற்றவாளியை பாதுகாக்க முயற்சித்து, தப்பிக்க நினைத்த அதிமுக பிரமுக சுதாகர் கைதானதாக கூறப்படும் நிலையில், சுதாகரின் புகைப்படத்துடன், ” இவன் தான் அந்த சார்” என்ற பதாகையுடன் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்தனர். மேலும், இவன் தான் , அந்த சார் என்ற கோசங்களும் எழுப்பியதால், சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், யார் அந்த சார் என்று அதிமுகவினரும், இவன் தான் சார் என்று திமுகவினர் ஒருவொருக்கொருவர் எதிர்ப்பு தெரிவித்தது சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

Related Post

ரூ.9 ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்ட விவகாரம் – தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சிஇஓ ராஜினாமா

Posted by - September 29, 2023 0
சென்னை: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான கிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் பணிக்காலம் இருக்கும் நிலையில் அவர்…

விஜயகாந்த் எப்போது மனம் உடைந்து போனார்? அவரது மகனே சொன்ன தகவல்

Posted by - December 29, 2023 0
மறைந்த கேப்டன் விஜயகாந்த் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் எப்போது மனம் உடைந்துபோனார் என்பதை அவருடைய மகன் சண்முக பாண்டியன் ஒருமுறை தெரிவித்திருக்கிறார்.  மறைந்த கேப்டன் விஜயகாந்த்…

சர்ச்சையில் சிக்கிய குக் வித் கோமாளி இர்பான்.. நடவடிக்கைக்கு பயந்து எடுத்த முடிவு

Posted by - May 22, 2024 0
ஹோட்டலில் சாப்பாடு எப்படி இருக்கிறது என ரிவியூ சொல்லி யூட்டியூபில் பாப்புலர் ஆனவர் இர்பான். அவர் சமீபத்தில் தொடங்கிய குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராகவும் வந்திருக்கிறார்.…

மழை தண்ணீரில் Chemical கழிவுகளை கலந்த விஷமிகள்- கண்டுபிடித்த விஜய் மக்கள் இயக்கத்தினர், வைரல் வீடியோ

Posted by - December 7, 2023 0
மிக்ஜாம் புயல் மிக்ஜாம் புயல் சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது சென்றுவிட்டது. புயல் முடிந்து 3 நாட்கள் ஆகியும் இன்னும் மக்கள் அந்த தாக்கத்தில் இருந்து இயல்பு நிலைக்கு…

வரி ஏய்ப்பு புகார் – போத்தீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

Posted by - September 12, 2025 0
தமிழகத்தில் போத்தீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *