வரும் காலத்தில் தமிழரை பிரதமராக்க உறுதியேற்போம்… அமித்ஷா பரபரப்பு பேச்சு..!
வரும் காலங்களில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம் என அமித்ஷா பேசியுள்ளார்.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜக தற்போதே தயாராகி வருகிறது. இந்த நிலையில் சென்னைக்கு வந்த உள் துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பாஜக நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
முதலாவதாக தென்சென்னை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கோவிலாம்பாக்கத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 60 சதவீதம் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சி இருக்கக்கூடிய 40 சதவீதம் பணிகளை செப்டம்பர் மாதத்திற்குள் முடியுங்கள். தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியை ஜெயிக்க பாடுபடுங்கள். 9 ஆண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.மேலும், “கடந்த காலங்களில் தமிழகத்தில் இருந்து இரண்டு பிரதமர்களை தவறவிட்டுள்ளோம். அதற்கு காரணம் திமுகதான். வரும் காலங்களில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி ஏற்போம்” என்று தெரிவித்தார்.