பாக்கியலட்சுமி
பெங்காலி தொடரான ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக ஓடிக் கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல்.
குடும்பத்திற்காக தனத கனவை தியாகம் செய்து வாழும் ஒரு பெண்மணியின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சதீஷ் மற்றும் சுசித்ரா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்த வார கதையில் கோபி, பாக்கியா குழம்பை சூப்பராக இருக்கிறது என கூறியதால் பிரச்சனைகள் ஏற்பட இருப்பதாக கூறப்படுகிறது.
கோபிக்கு ஆர்மி
தொடரின் கதைக்கே ரசிகர்கள் ஒருபக்கம் இருந்தாலும் அதில் கோபியாக நடிக்கும் சதீஷிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாராம் உள்ளது. தற்போது அவருக்கான ஆர்மியில் இரண்டு சீரியல் நடிகைகளும் இணைந்துள்ளார்.
அது வேறுயாரும் இல்லை பாக்கியலட்சுமி தொடரில் நடிக்கும் திவ்யா மற்றும் ரித்திகா தான் அவரது ஆர்மியில் இணைந்துள்ளார்கள். ரித்திகா படப்பிடிப்பு தளத்தில் கோபி பக்கத்தில் உட்கார்ந்து நாங்கள் கோபி ஆர்மி என வீடியோ வெளியிட்டுள்ளார்.