கோடைக்கால பயணங்களை மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு Stay Now Pay Later (SNPL) என்ற சலுகையை அறிவித்துள்ளது.

சமீபகாலமாக பலன்களை பெற்றுவிட்டு பின்னர் பணம் செலுத்தும் முறை பல தளங்களில் பிரபலம் அடைந்து வருகிறது. பயணத்திற்கு கூட உடனடியாக பணம் இல்லாவிடும் முதலில் பயணம் செய்துவிட்டு பின்னர் EMI முறையில் பணம் செலுத்தும் ஆப்ஷன் எல்லாம் வந்துவிட்டது. அதே போல இப்போது தங்குமிடத்திற்கும் வசதி ஏற்படுத்தி வருகின்றனர்.
முன்னணி ஹோட்டல் ஒருங்கிணைப்பாளரான ஓயோ கோடைகாலப் பயணிகளுக்கு ஒரு அட்டகாசமான சலுகையை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த கோடைக்கால பயணங்களை மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு Stay Now Pay Later (SNPL) என்ற சலுகையை அறிவித்துள்ளது.
இந்த அம்சம் பயணிகள் பயணத்தை திட்டமிடும்போது உடனடி நிதிச்சுமையின்றி தங்கள் சுற்றுப்பயணங்களை திட்டமிட அனுமதிக்கிறது. கடன் அடிப்படையிலான கொடுப்பனவுகள் மூலம் தங்குமிட வசதிகளை பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.

இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை கடன் வரம்பை வழங்குகிறது. ஹோட்டலில் தங்கிய பிறகு 15 நாட்களுக்குள் இந்தத் தொகையைக் கட்டினால் போதுமானது. ஆன்லைன் மூலம் OYO அறைகளை முன்பதிவு செய்யும் போது கட்டண விபரங்கள் வரும் போது SNPL தெரிவை தேர்ந்தெடுக்கவும்.
ஹோட்டல் முன்பதிவுகளுக்கு SNPL வசதியாக ஒரு முறை கட்டணத்தை வழங்குகிறது. அதே போல நிறுவனம் வழங்கும் SIMPLE ஆப்ஷன் மூலம் ஹோட்டல்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 65 சதவீதம் வரை தள்ளுபடி மற்றும் ரூ.50 கேஷ்பேக் வழங்கப்படுகிறது
பயனர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தை செலுத்தத் தவறினால், தாமதக் கட்டணத்துடன் பில் தொகையைப் பொறுத்து ரூ.250 வரை வட்டி வசூலிக்கப்படும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது. சில நேரங்களில் அபராதமும் வசூலிக்கப்படும்.
மேலும், இது வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்டோரில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. எதிர்காலத்தில் ஏதேனும் கடன் பெறுவதற்கான வாய்ப்புகளையும் இது பாதிக்கிறது.