கடல் கடந்து காதல்- நார்வே பெண்ணை கரம்பிடித்த கடலூர் வாலிபர்

358 0

கடலூர்:

கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன். பி.எச்.டி. பட்டதாரியான இவர் நார்வே நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில் நார்வே போர்கன் பகுதியை சேர்ந்த சிவானந்தினி என்ற பெண்ணும் பணிபுரிந்து வருகிறார். சிவானந்தினியின் குடும்பத்தினர் இலங்கை தமிழர். இவர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே நார்வேவில் வந்து குடியேறிவிட்டனர்.கடல் கடந்து காதல்- நார்வே பெண்ணை கரம்பிடித்த கடலூர் வாலிபர் | A Cuddalore  boy who crossed the sea and held hands with a Norwegian girl

அதனைத் தொடர்ந்து சிவானந்தினியும் அந்த புகழ் பெற்ற பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. காதல் திருமணம் செய்து கொண்டாலும் குடும்பத்தினர் சம்மதத்துடன் செய்து கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் இரு குடும்பத்தினரும் பேசி அதில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து இருவருக்கும் திருமணம் கடலூர் மஞ்சக் குப்பத்தில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

தமிழ்முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் மணமகன் குடும்பத்தினரும் நார்வேவில் இருந்து வந்திருந்த மணமகள் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக கலந்து கொண்டனர். அதன் பிறகு இந்து கோவில்களில் தமிழ் முறைப்படி அவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அப்பொழுது நார்வே நாட்டில் பிறந்து வளர்ந்தாலும் தமிழ் கற்றுக் கொண்டதாகவும் தமிழ் கலாச்சாரம் மிகவும் பிடிக்கும் என்பதால் தமிழரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இருந்த நிலையில் தற்போது தன்னுடைய கனவு நினைவாகியுள்ளதாக மணமகள் தெரிவித்தார்.

நார்வே சென்றபோது தனக்கு காதல் ஏற்பட்டதாகவும் ஆனால் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதால் குடும்ப சம்மதத்துடன் இந்த திருமணம் நிறைவேறி உள்ளதாக மண மகன் பாலமுருகன் தெரிவித்தார். இலங்கையில் இருந்து நார்வே சென்று குடியேறிய இலங்கை தமிழர் குடும்பத்தினர் தற்பொழுது கடலூரைச் சேர்ந்த மண மகனை கடலூருக்கு வந்து தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டது இங்கு உள்ளவர்களை ஆச்சர்யம் அடைய செய்தது.

 

 

 

Related Post

செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா? – மகிழ்ச்சியில் மாணவர்கள்!

Posted by - August 31, 2023 0
4-12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.27 தேதி முதல் அக்.2ம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு மற்றும்…

சதுரங்கவேட்டை சினிமா பாணியில் இரிடியம் கண்டுபிடிக்கும் ‘ரைஸ் புல்லிங் எந்திரம்’ என கூறி மோசடி-2 பேர் கைது

Posted by - August 2, 2023 0
வந்தவாசி: விழுப்புரம் மாவட்டம் நாப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர்கணேஷ். வியாபாரியான இவர் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு கடனாளி ஆனார். இதையடுத்து நண்பர் மூலமாக ரைஸ் புல்லிங் எந்திரம் வாங்கி…

“குடும்பத்திற்காக டெல்லி செல்கிறார் ஸ்டாலின்“ எல்லாம் ‘தம்பி‘ படுத்தும் பாடு – வறுத்தெடுக்கும் இபிஎஸ்

Posted by - May 21, 2025 0
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற் முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தன்னுடைய குடும்பத்திற்காகவே அவர் டெல்லி செல்வதாக சாடியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.…

பெண்களை சூப்பர்வுமனாக மாற்ற இந்த 5 சூப்பர் உணவுகளை அவங்க உணவில் அவசியம் சேர்த்துக்கணுமாம்…!

Posted by - December 22, 2023 0
பெண்கள் பெரும்பாலும் அலுவலகம் மற்றும் வீட்டு வேலைகளின் சுமையால் தங்கள் சொந்த ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. அதனால் படிப்படியாக, அவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள், இதன் காரணமாக,…

தூதுவளை.. அத்துடன் வேப்பிலை.. பற்களை பாதுகாக்கும் ஆச்சரிய இலைகள்.. ஈறுகளை பாதுகாக்கும் துளசியிலை

Posted by - December 8, 2023 0
சென்னை: பற்களை பாதுகாப்பதில் உணவுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.. அந்தவகையில், சிலவகை இலைகளின் முக்கியத்துவத்தை இங்கு பார்க்கலாம். பொதுவாக, பற்களின் நிறம், ஈறுகளின் நிறத்தை வைத்தே, ஒருவரின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *