சிங்கத்திடம் சிக்கிய பசு – செங்கலை எறிந்து காப்பாற்றிய விவசாயி- வைரலாகும் வீடியோ

224 0

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தின் சோம்நாத் மாவட்டத்தில் உள்ளது கிர் தேசிய பூங்கா. இது உலகப் புகழ்பெற்ற ஆசிய சிங்கங்களுக்கான தேசியப் பூங்கா ஆகும். இந்நிலையில், கிர் வனப்பகுதியில் சிங்கம் ஒன்று பசு மாடு ஒன்றை இரையாக்க முயற்சித்தது. இதனைக் கண்ட பசுவின் உரிமையாளர் தடுத்துக் காப்பாற்றிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.சிங்கத்திடம் சிக்கிய பசு - செங்கலை எறிந்து காப்பாற்றிய விவசாயி- வைரலாகும்  வீடியோ | Farmer Casually Walks In, Saves His Cow From A Lioness' Death Grip

இதுதொடர்பான வீடியோவை பா.ஜ.க.வை சேர்ந்த விவேக் கோடாடியா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சாலையில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டை பெண் சிங்கம் ஒன்று தாக்குகிறது. பசு மாட்டின் கழுத்தை இறுகப் பிடித்துக்கொண்ட அந்தச் சிங்கம் அதை இழுக்க முயற்சிக்கிறது.

அச்சமயம் அங்கு வந்த பசு மாட்டின் உரிமையாளரான விவசாயி திடீரென ஒரு செங்கலை எடுத்து சிங்கத்தை நோக்கி வீசினார். இதைக் கண்டதும் சிங்கம் பிடியை தளர்த்துவிட்டு காட்டுக்குள் ஓடுகிறது. பசுவும் உயிர் பிழைக்கிறது. இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. பசுவைக் காப்பாற்றிய விவசாயியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Post

முன்னேறும் பாஜக: தடுமாறும் ‘இ.ண்.டி.யா’

Posted by - February 15, 2024 0
“அரசியலைப் பொறுத்தவரை ‘குடும்பக் கட்டுப்பாட்’டில் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை” – சமீபத்தில் ஒரு செய்தித் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அமித் ஷா, கூட்டணி விரிவாக்கம் குறித்து நகைச்சுவையுடன் குறிப்பிட்ட…

2 தொகுதிகளில் உங்களுடைய பெயர் இருந்தால் எங்கு வாக்களிக்க வேண்டும் தெரியுமா?

Posted by - April 18, 2024 0
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19- ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வாக்காளர்களுக்கு எழும் சந்தேகங்களும்.…

மத்திய பட்ஜெட் சிறு, குறு தொழில்களுக்கு எப்படி? : என்ன சொல்கிறார்கள் தொழிலாளர்கள்?

Posted by - February 1, 2025 0
 பட்ஜெட் அறிவிப்பின்படி, சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு 10 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் வெளியாகியிருக்கும் அறிவிப்புகள் சிறு குறு தொழிலார்களுக்கு எந்த…

டிசம்பர் 2024 முடிவதற்குள் கட்டாயம் செய்து முடிக்க வேண்டிய முக்கியமான 2 வேலைகள்: இதுதான் கடைசி வாய்ப்பு..

Posted by - December 10, 2024 0
இந்த டிசம்பர் மாதத்தின் கடைசி தேதி (டிசம்பர் 31) முடிவதற்குள் ஆதார் (aadhaar) மற்றும் பான் (pan) கார்டு சார்ந்த பணிகளை முடிக்க வேண்டும். குறிப்பாக இலவச…

பெரும் விபத்து தவிர்ப்பு: கொல்லம்-சென்னை ரெயிலில் அடிச்சட்டத்தில் விரிசலுக்கு காரணம் என்ன? அதிகாரிகள் ஆய்வு

Posted by - June 5, 2023 0
செங்கோட்டை: கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை, தென்காசி வழியாக சென்னை எழும்பூருக்கு தினசரி ரெயிலாக கொல்லம்-சென்னை ரெயில் (வண்டி எண் 16102) இயக்கப்பட்டு வருகிறது. இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *