சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து முடித்த பின்னர் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் ‘லால் சலாம்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார்….
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில்…தற்போது ரஜினிகாந்த் ஓய்வு எடுப்பதற்காக மாலத்தீவுக்கு செல்வதாக கூறப்படுகிறது..
மாலத்தீவுக்கு செல்லும் வழியில் இலங்கை விமான நிலையத்திற்கு சென்ற தலைவர் ரஜினி விமான நிலையத்தில் சூப்பர் வரவேற்பு கொடுக்கப்பட்டது…
ரஜினிகாந்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமான சேவை தங்களின் அதிகார பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு தெரிவித்துள்ளது…இது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது..

தலைவர் ரஜினிகாந்த் மிகவும் எளிமையாக ஒரு டி-ஷர்ட் மற்றும் பேன்ட் அணிந்து தோளில் கருப்பு நிற பேக் ஒன்றை மாட்டியுள்ளார்…ரஜினிகாந்த் படப்பிடிப்பை முடித்த கையேடு ஆன்மீக சுற்றுலா அல்லது தன்னுடைய பண்ணை வீட்டில் ஓய்வெடுப்பதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் இந்த முறை இயற்கையின் அழகை ரசிப்பதற்காக மாலத்தீவுக்கு செல்வது ரசிகர்களுக்கே இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது..
ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான காவாலா ட்ரெண்ட் ஆகியது அதை தொடர்ந்து 17 ஆம் தேதி அடுத்த பாடல் வர உள்ளது..