ஆந்திராவில் தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்ற விவசாயி- 2 கிலோ மீட்டர் வரிசையில் நின்று வாங்கி சென்றனர்

208 0

திருப்பதி:

ஆந்திராவில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் 120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளிக்காக வியாபாரி, விவசாயி கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு ஆந்திராவில் தக்காளிக்கு மவுசு ஏற்பட்டுள்ளது.தக்காளி விலை கிடுகிடு சரிவு: கிலோ ரூ.50-க்கு விற்பனை | Sigaram News

இந்த நிலையில் கடப்பா நகரில் உள்ள உழவர் சந்தையில் நேற்று விவசாயி ஒருவர் தக்காளி விற்பனைக்கு கொண்டு வந்தார். அவர் ஒரு கிலோ தக்காளி கிலோ ரூ.50 என கூவி கூவி விற்பனை செய்தார். இதனை கேட்டதும் ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்தனர். தள்ளுமுள்ளு ஏற்படாமல் இருக்க வரிசையில் நிற்கும்படி வியாபாரி கேட்டுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் வரிசையை கடைப்பிடிக்க ஆரம்பித்தனர். 2 கிலோமீட்டர் தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தக்காளி வாங்கிச் சென்றனர். அதிகளவு பொதுமக்கள் வந்ததால் ஒருவருக்கு 3 கிலோ தக்காளி மட்டுமே விவசாயி வழங்கினார். உழவர் சந்தை பகுதியில் தக்காளி வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Post

காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது இந்திய ஜனநாயகத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல்: கார்கே கண்டனம்..!!

Posted by - February 16, 2024 0
காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஜனநாயகத்தை காக்க ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் போராடுவார்கள் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். சர்வாதிகாரத்தின்…

பிரதமர் மோடிக்கு நன்றி – ரஜினிகாந்த் ட்வீட்…

Posted by - May 28, 2023 0
குடிமகனாகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் புதிய கட்டிட திறப்புவிழாவை மகிழ்ச்சியுடனுடம் ஆவலுடனும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். – இளையராஜா தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி என்று நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.…

Air India’s Biggest Mistake! ✈️ டெல்லி To கனடா.. ஆனா நடந்தது வேற! 🛑

Posted by - March 21, 2026 0
டெல்லியிலிருந்து கனடாவுக்கு (Vancouver) புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் விமானம், சுமார் 4 மணிநேரம் பறந்து சீனா வான்வெளி வரை சென்ற நிலையில், திடீரென டெல்லிக்கே திரும்பியது…

மனைவியை அடித்துக்கொன்று பிரீசரில் அடைத்த கணவர்? பரபரப்பு புகார்- போலீசார் விசாரணை

Posted by - July 3, 2023 0
போபால்: மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தை சேர்ந்தவர் பாரத் மிஸ்ரா. இவரது மனைவி சுமித்ரி (வயது40). சுமித்ரி கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயால்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *