எதிர்நீச்சல் சீரியலில் இன்று என்ன நடக்க போகிறது என்பதை தெரிவிக்கும் விதமாக தற்போது ஒரு குட்டி புரோமோ வெளியாகியுள்ளது.
அப்பத்தாவின் சொத்துக்கள் தன்னுடைய கையை விட்டு சென்றதை அறிந்து விரக்தியிலும் கடுப்பிலும் வெறுப்பிலும் ஜீவானந்தத்தின் மீது கடும் கோபத்திலும் உள்ளார் குணசேகரன். ஜனனியாலும் இந்த தோல்வியை மனதார ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும்,எப்படியும் ஜீவனந்தத்திடம் மோதி சொத்துக்களை மீட்க வேண்டும் என்கிற என்னத்தோடு அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவித்து கொண்டிருக்கிறார் ஜனனி.
அதே போல் தன்னுடைய உயிர் தோழனான கெளதம் கூட தனக்கு துரோகம் செய்து விட்டாரே என்றும் அவர் ஜீவனந்தத்தின் ஆள் என்பதை அறிந்து மிகுந்த வேதனையில் தவித்து வருகிறார் ஜனனி.நேற்றைய தினம், ஜீவானந்தத்தின் மீது புகார் கொடுக்க குணசேகரன் காவல் சென்ற நிலையில் அவருக்கு முன்பே ஜீவானந்தம் காவல் நிலையத்தில் இருந்தது மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது பார்வையாளருக்கும் இது அதிர்ச்சியை தந்தது…

ஜீவானந்தம், குணசேகரனை விட சாமர்த்தியமாக செயல்பட்டு வருவதால் நிலைகுலைந்து தன்னுடைய தம்பிகளிடம் சவால் விடும் விதத்தில் ஜனனி மூலமாக போன சொத்துக்கள் ஜனனி மூலமாகவே வர வைக்கிறேன் என கோபமாக கூறுகிறார்.ஆடிட்டரும் உங்கள் வீட்டு பெண்களால் மட்டுமே இந்த சொத்தை மீட்க முடியும் என கூறுகிறார். மற்றொரு புறம் ஜனனி அப்பத்தாவின் பக்கத்தில் அமர்ந்து அந்த ஜீவானந்தம் நல்லவன் இல்ல அப்பத்தா நாம ஏமார்ந்து விட்டோம் என கூறுகிறார்.அவரும் தன்னால் முடிந்ததை சொல்லி வருகிறார்..
குணசேகரன் வீட்டில் உள்ள பெண்கள்,தன்னை பார்த்து பரிதாப படவேண்டும் என காரை விட்டு இறங்கும் போதே அழுது புலம்பி கமலை மிஞ்சும் நடிப்பை போட்டார்….எனவே இன்றைய தினம் என்னென்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…செம ஜாலியான Entertainment காத்துள்ளது போல..