திண்டுக்கல்: குப்பையில் வீசப்பட்ட பெண் சிசுக்கள்; நாய்கள் குதறிய அவலம் – நடந்தது என்ன?!

191 0

திண்டுக்கல், மேட்டுப்பட்டி காளியம்மன் கோயில் அருகே மாநகராட்சி சார்பில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், நேற்று காலையில் அந்தக் குப்பைத் தொட்டியை நாய்கள் சூழ்ந்து நின்று கடித்துக் குதறி சண்டையிட்டன.போலீஸார் விசாரணை

அப்போது துப்புரவுப் பணிக்காக அந்தப் பகுதிக்கு தூய்மைப் பணியாளர்கள் வந்தனர். அவர்கள் குப்பைத் தொட்டியிலிருந்து இரண்டு நாய்கள் எதையோ கடித்து இழுத்து கவ்விக்கொண்டு ஓடுவதையும், மேலும் சில நாய்கள் அதைப் பிடுங்கவும் சண்டையிட்டன.பெண் சிசுக்கொலை: மதுரை அருகே கள்ளிப்பால் ஊற்றி குழந்தையை கொன்றதாக பெற்றோர்,  தாத்தா கைது - BBC News தமிழ்

இறைச்சிக் கழிவுகளுக்காக நாய்கள் சண்டையிடுகின்றன என நினைத்து அந்த நாய்களைத் தூய்மைப் பணியாளர்கள் விரட்டினர். பின்னர் அருகே சென்று பார்த்தபோது குப்பைத் தொட்டிக்குள் பலத்த காயங்களுடன் இரட்டைப் பெண் சிசுக்களின் உடல்கள் இருப்பதும், அதில் ஒரு சிசுவின் தலை இல்லாமல் இருப்பதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

பொதுமக்கள் இது குறித்து திண்டுக்கல் தெற்கு போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் நிகழ்விடத்துக்கு வருவதற்குள் குப்பைத் தொட்டியில் இரட்டைப் பெண் சிசுக்களின் உடல்கள் கிடப்பது குறித்த தகவல் அந்தப் பகுதியில் காட்டுத்தீபோல் பரவியது.

இதனால் சிசுக்களின் உடல்களைப் பார்ப்பதற்காக அந்தப் பகுதியில் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். விரைந்து வந்த போலீஸார், குப்பைத் தொட்டியை சூழ்ந்து நின்ற பொதுமக்களைக் கலைந்து செல்ல வைத்தனர். பின்னர் பெண் சிசுக்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சிசுக்கள் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இரட்டைப் பெண் சிசுக்கள் குறைப் பிரசவத்தில் பிறந்திருப்பதும், சிசுக்களின் உடலை யாரோ சாக்குப்பையில் போட்டு குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றதும் தெரியவந்தது. மேலும், சிசுக்களில் ஒன்றின் தலையை நாய்கள் தூக்கிச் சென்றதும் தெரியவந்தது.

கூடிய மக்கள் மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். அந்த வீடியோ பதிவில் அதிகாலையில் ஒரு பெண் சாக்குப்பையுடன் குப்பைத் தொட்டி அருகே வருவதும், பின்னர் குப்பைத் தொட்டிக்குள் அந்தச் சாக்குப்பையை வீசிச் செல்லும் காட்சிகளும் பதிவாகியிருந்தன. ஆனால், அந்தக் காட்சிகளில் பெண்ணின் முகம் சரியாகப் பதிவாகவில்லை. குப்பையில் வீசப்பட்ட சிசுக்களை நாய் குதறிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Post

செங்கல்பட்டு, திருப்பத்தூர் மாவட்டகளில் நில அதிர்வு – மக்கள் அதிர்ச்சி

Posted by - December 8, 2023 0
செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காலை 7.39 மணி அளவில் ஏற்பட்ட…

காரைக்குடியில் பேக்கரி கடையில் பயங்கர தீ விபத்து- ரூ.40 லட்சம் பொருட்கள் சேதம்

Posted by - July 10, 2023 0
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனி வாசல் பகுதியில் பிரபல பேக்கரி கடை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள சமையல் கூடத்தில் இன்று காலை ஊழியர்கள் நாகராஜ், திருப்பதி…

வெப்பநிலை இயல்பைவிட மேலும் அதிகரிக்கும் : வானிலை மையம் எச்சரிக்கை

Posted by - February 26, 2024 0
தென்தமிழக உள் மாவட்டங்கள், ஏனைய வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மற்றும் நாளை,…

திக்குமுக்காட செய்த தமிழ்நாடு பட்ஜெட்..! எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி? பள்ளிக்கல்வித்துறை டாப்..!

Posted by - March 14, 2025 0
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். பள்ளிக்கல்வித்துறைக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.…

அகத்தை சுத்தப்படுத்தும்! விஷத்தையே முறிக்கும்! அகத்தி கீரையை இந்த கறியுடன் மட்டும் சாப்பிடாதீர்கள்!

Posted by - January 8, 2024 0
சென்னை: அகத்தி கீரை நுரையீரலை பாதுகாக்கும் கீரையாகும். இதை யாரெல்லாம் சாப்பிடலாம், யாரெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா? அகத்தையே சுத்தப்படுத்தும் கீரைதான் அகத்திக் கீரை என்பார்கள். இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *