படிக்கும் காலத்தில் இது தேவைதானா என எதிர்ப்பு- கல்லூரி காதல் ஜோடி திருமணம் செய்துவிட்டு தற்கொலை

251 0

திருப்பதி:

ஆந்திரா மாநிலம், அன்னமய்யா மாவட்டம், செட்டேவாரி பள்ளியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். லதிகம் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது வாலிபர். இருவரும் புங்கனூரில் உள்ள தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் 2-ம் ஆண்டு படித்து வந்தனர். கல்லூரியில் படிக்கும் போது இருவரும் நட்பாக பழகி வந்தனர்.தற்கொலை எண்ணத்துக்கான காரணம் என்ன? விடுபடுவது எப்படி? - BBC News தமிழ்

நட்பு காதலாக மாறியது. இவர்களது காதல் விவகாரம் அவர்களது பெற்றோருக்கு தெரிய வந்தது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் காதல் தேவைதானா என இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி திருப்பதி அருகே உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். மகன், மகளை காணாததால் அவர்களது பெற்றோர்கள் புங்கனூர் போலீசில் புகார் செய்தனர்.

பெற்றோர்கள் போலீசில் புகார் செய்ததை அறிந்த காதல் ஜோடி எப்படியாவது தங்களை பிரித்து விடுவார்கள் என எண்ணி கவலை அடைந்தனர். இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி திருப்பதி பீளேரு சோதனை சாவடி அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றனர். அங்குள்ள மரத்தில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

நேற்று மாலை வனப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் காதல் ஜோடி தூக்கில் தொங்குவதை கண்டனர். இது குறித்து பாக்ராபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தூக்கில் தொங்கியவர்களின் பிணங்களை மீட்டனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

சார்ஜ் போடவே வேண்டாம்… ஒளியின் சக்தியில் இயங்கும் வயர்லெஸ் கீபோர்டு அறிமுகம்!

Posted by - September 25, 2025 0
இது பாதுகாப்பான கனெக்டிவிட்டிக்காக லாஜி போல்ட் USB-C ரிசீவருடன் வருகிறது. லாஜிடெக் சிக்னேச்சர் ஸ்லிம் சோலார்+ K980 மாடல் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது.லாஜிடெக் நிறுவனம் சிக்னேச்சர்…

பெங்களூரு பெண் ஐ.டி. ஊழியரிடம் ரூ.97ஆயிரம் மோசடி: மும்பை கும்பல் துணிகரம்

Posted by - September 4, 2023 0
பெங்களூரு: பெங்களூரு மன்யாதாடெக் பார்க் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் பெங்களூரு சம்பிகேஹள்ளி போலீசில் ஒரு…

வர்த்தகத்தை மூடும் அமேசான்.. இந்தியாவில் மட்டும் ஏன் இப்படி..?!

Posted by - November 29, 2022 0
உலகிலேயே வேகமாக வளர்ச்சி அடையும் முன்னணி பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா முதன்மையாக இருப்பது மட்டும் அல்லாமல் டிஜிட்டல் வர்த்தகச் சந்தையில் மாபெரும் வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டு…

நிகர நேரடி வரி வசூல் ரூ.8.65 லட்சம் கோடி – நிதி அமைச்சகம் தகவல்

Posted by - September 19, 2023 0
புதுடெல்லி: மத்திய அரசு நேரடி மற்றும் மறைமுக வரி என்னும் 2 விதமான வரிகளை வசூலித்து வருகிறது. இதில் நேரடி வரிகள் என்பதில் தனிநபர் மற்றும் கம்பெனிகள்…

குமரவடிவேல் நடராஜன்: இட்ஸ் மீ !! வைகைபுயல் வடிவேலுவின் வரலாற்றை பார்க்கலாமா ??

Posted by - September 12, 2023 0
குமரவடிவேல் நடராஜன் வைகைபுயலாக நமக்கு தெரிந்த வடிவேலுவின் முழு பெயர் குமரவடிவேல் நடராஜன். இவர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். தந்தை கண்ணாடி தொழில் செய்பவர். சிறு வயதிலிருந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *