GENERAL NEWS“40 நாட்கள், 8 கட்ட தரையிறக்கம்! சந்திரயான் 3ன் நிலவு பயணம்! தரையிறங்கும் Vikram Lander!”

197 0

சந்திரயான்-3 விண்கலம் 40 நாட்கள் பயணத்தை முடித்து இன்று மாலை நிலவில் தரையிறங்குகிறது. நிலவில் சந்திரயான்-3 பத்திரமாக கால் பதிக்க முக்கியமான பத்து கட்டங்களை கடக்க வேண்டியுள்ளன. அவை என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளலாம். தற்போது நிலவில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் விக்ரம் லேண்டரை 7.4 கிலோமீட்டர் தொலைவுக்குக் கொண்டு வருவது தான் முதல் கட்டம்.

 

 

அப்போது லேண்டரின் வேகம் ஆயிரத்து 200 கிலோமீட்டர் அளவாகக் குறைக்கப்படும். அதில் இருந்து இரண்டாவது கட்டம் தொடங்கும். அப்போது லேண்டர் 7.4 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து 6.3 கிலோமீட்டராக கீழே இறக்கப்படும். அப்போது கிடைமட்டமாக இருக்கும் லேண்டர், தரையிறங்குவதற்கு வசதியாக, 50 டிகிரி கோணத்திற்கு சாய்வாகத் திருப்பப்படும். அதே நிலையில் 6.3 கிலோமீட்டர் தொலைவில் இருந்து 800 மீட்டர் தூரத்திற்கு குறைக்கப்படுவதே மூன்றாவது கட்டமாகும்.

 

 

அடுத்த கட்டத்தில் லேண்டர் 150 மீட்டர் உயரத்திற்கு நிலவின் தரைப் பகுதியை நோக்கி கீழே கொண்டு வரப்படும். அப்போது லேண்டரில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நிலவின் மேற்பரப்பில் உள்ள மேடு பள்ளங்களைத் துல்லியமாக கவனித்து, சமதளப் பரப்பைத் தேர்வு செய்யும். பின்பு தேர்வு செய்த பாதுகாப்பான இடத்தில் மெதுவாக தரையிறக்குவதே ஐந்தவாது கட்டமாகும். அறுபது மீட்டர் உயரத்தில் இருந்து 10 மீட்டர் உயரத்திற்கு லேண்டரை கீழே இறக்குவதுதான் ஆறாவது கட்டம்.

 

 

7வது கட்டத்தில் ராக்கெட் எஞ்சின்கள் நிறுத்தப்படும். எஞ்சின்கள் நிறுத்தப்பட்டவுடன் விண்கலம் 10 மீட்டர் உயரத்தில் இருந்து நிலவின் தரைப்பரப்பில் வேகமாக மோதாமல் இருப்பதற்காக லேண்டர் மிக மெதுவாக தரையிறக்கப்படும் கடைசி கட்டமாக நிலவில் தரையிறங்கிய லேண்டர் சுமார் 2 மணி நேரம் அதே நிலையில் நிற்கும். அதன்பிறகு லேண்டரில் இருந்து வெளியே வந்து பிரக்யான் ரோவர் இறங்கி ஆய்வை தொடங்கும்.

Related Post

எதிர்த்தா பேசுறீங்க..! மாநில அரசுகளின் உரிமையை பறித்த மத்திய அரசு – இனி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு..!

Posted by - February 22, 2025 0
சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்க இனி மாநில அரசுகளின் அனுமதி அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் மேலும் ஒரு உரிமையை பறிக்கும் விதமாக சிபிஎஸ்இ அமைப்பின் அறிவிப்பு…

கொரோனா பரவலுக்கு பிறகு மாரடைப்பு பாதிப்பு அதிகரிப்பு- மருத்துவமனைகளில் தீவிர ஆராய்ச்சி

Posted by - July 22, 2023 0
புதுடெல்லி: கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு மாரடைப்பு காரணமாக இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக்…

Voter ID இல்லையா? கவலை வேண்டாம்.. இந்த 12 ஆவண்ங்களில் ஒன்று இருந்தால் போதும்

Posted by - April 18, 2024 0
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஒன்றை…

எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி லாபம்: பெட்ரோல், டீசல் விலையை குறைப்பார்களா?

Posted by - July 27, 2023 0
மும்பை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனாலும் இந்திய எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமலேயே உள்ளன. இந்நிலையில் எண்ணை…

ஆந்திராவில் திசைமாறிய திருடர்கள்- கடை, தோட்டத்தில் 450 கிலோ தக்காளி கொள்ளை

Posted by - August 4, 2023 0
திருப்பதி: தக்காளியின் விலை தங்கத்தின் விலையை போல் நாள்தோறும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தக்காளியின் விலை உச்சத்தை அடைந்ததால் இல்லத்தரசிகள் தக்காளியை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *