கறிகள் மற்றும் குழம்புகள் இந்திய உணவு வகைகளில் பிரிக்க முடியாத பகுதியாகும். எனவே கெட்டியான, ருசியான கறி இல்லாமல் எந்த உணவும் முழுமையடையாது.
வீட்டில் உள்ள பெண், ஆண் இருவருக்கும் இருக்கும் முக்கியமான பிரச்சனையாக இருப்பது சமையல்தான். எவ்வளவு ருசியாக சமைத்தாலும், சிலர் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார்கள். இன்னும் சிலர் எவ்வளவு முயற்சி செய்தாலும், சமையலில் சரியான பக்குவம் வராமல் சிரமப்படலாம். இது நீங்கள் சமைக்கும் கறியின் சுவையையும் அமைப்பையும் பாதிக்கும்.
ஒவ்வொரு முறையும் கறிகள் மற்றும் குழம்புகளின் சுவை மற்றும் அமைப்பைக் கச்சிதமாகப் பெறுவது என்பது மிகவும் சவாலானது என்பதை மறுப்பதற்கில்லை. ஒவ்வொரு முறையும் சுவையான கிரேவிகள் மற்றும் கறிகளை கச்சிதமாக செய்ய உதவும் சில சிறந்த சமையல் குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
தண்ணீர் கறிகளை சரிசெய்யவும்
நீங்கள் கெட்டியான அலல்து திடமான கிரேவியை தயாரிக்க விரும்பி இருக்கலாம். ஆனால், சில நேரங்களில் கறி குழம்பில் தண்ணீர் அதிகமாகி, கிரேவி ரசம்போல ஆகி இருக்கலாம். இப்படி ஒரு இக்கட்டான பிரச்சனையை நீங்களும் சந்தித்து இருக்கிறீர்களா?
ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து அதில் சிறிது சோள மாவு சேர்த்து 2-3 டீஸ்பூன் தண்ணீரில் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை உங்கள் தண்ணீர் நிறைந்த கறிகளில் சேர்த்து தொடர்ந்து கிளறவும், இது கறிகளுக்கு அடர்த்தியான அமைப்பை சேர்க்க உதவுகிறது. இதனால், உங்கள் கறி கெட்டியாகி கிரேவியாக வரும்.
செயல்முறையைப் பின்பற்றவும்
ஒவ்வொரு முறையும் சரியான கிரேவி அல்லது கறிகளை சமைப்பதற்கான எளிதான வழி, செய்முறையை படிப்படியாகப் பின்பற்றுவதாகும். இது ஒரு டிஷில் உள்ள சுவைகளை நன்றாக உறிஞ்சி, சமையலில் அப்படியே வைக்க உதவுகிறது. உதாரணமாக, வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சியை எண்ணெயில் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். இது கறி குழம்பிற்கு நல்ல சுவையையும் வலுவான மனத்தையும் கொடுக்கும்.
புதிய பொருட்களைப் பயன்படுத்துங்கள்
உங்களுக்குப் பிடித்தமான கறிகளை சமைக்க புதிய பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம், கறிகளின் சுவை மற்றும் அமைப்பை நீங்கள் அதிகரிக்கலாம். புதிய பொருள் என்பது பொதுவாக மசாலாப் பொருட்களைதான் குறிக்கும். கறியில் மசாலாப் பொருட்களை சேர்ப்பதன் மூலம், உணவின் அமைப்பைபும் சுவையும் அதிகரிக்கும். உதாரணமாக: நீங்கள் நல்ல வசமான கறி குழம்பை விரும்பினால், கிரேவிகளின் தேவையான அமைப்பு மற்றும் சுவைகளைப் பெற முழு மசாலாப் பொருட்களையும் சேர்க்கவும்.
புரதங்களை சமைக்கவும்
கோழி இறைச்சியில் புரதம் அதிகம் உள்ளது. நீங்கள் புரத சத்தை உணவில் இருந்து முழுவதும் பெற வேண்டும் என்றால், சிறந்த அமைப்பு மற்றும் சுவைக்காக கறியில் சேர்ப்பதற்கு முன் அதை நன்றாக வதக்குவது சிறந்தது. பொதுவாக கறிகளை நன்றாக சமைத்த பின்புதான் உண்ண வேண்டும். கடல் உணவைப் பயன்படுத்தினால், அதிகமாகச் சமைப்பதைத் தடுக்க கடைசியில் அவற்றை சேர்க்க வேண்டும்.
கிரீம் தன்மையைச் சேர்க்கவும்
காரமான அல்லது உப்பான கறியை சரிசெய்ய, சமைக்கும் முடிவில் தேங்காய் பால், கிரீம் அல்லது தயிர் போன்ற கிரீமி பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் கறிகளை சுவையானதாக மாற்றலாம். எல்லா நேரங்களிலும் சுவையாக மாற்றுவதற்கான எளிதான வழியாக, உங்கள் கறியில் கிரீம் சேருங்கள். இது உங்கள் கறிக்கு செழுமையையும் மென்மையான அமைப்பையும் சேர்க்கிறது.
மசாலாப் பொருட்கள்
மசாலாப் பொருட்கள் அவற்றின் அத்தியாவசிய எண்ணெய்களை வெளியிடுகின்றன மற்றும் கறியின் சுவையை ஆழமாக்குகின்றன. மசாலாப் பொருட்களையும் மூலிகைகளையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதன் மூலம், இதயம் நிறைந்த கறியை ருசிக்கும் உங்கள் அனுபவத்தை உருவாக்கலாம் அல்லது உடைக்கலாம்.