இட்லி,தோசைக்கு கத்திரிக்காயை இனி இப்படி துவையல் பண்ணுங்க..

182 0

கத்திரிக்காய் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய ஒருஅற்புதமான காய்கறி. கத்திரிக்காயைக் கொண்டு நாம் பல ரெசிபிக்களை செய்யலாம். இதுவரை கத்திரிக்காய் கொண்டு சாம்பார், சட்னி என்று செய்து சுவைத்திருப்போம்.

ஆனால் கத்திரிக்காயை எள்ளு விதைகளுடன் சேர்த்து கத்திரிக்காய் எள்ளு துவையவை செய்தால் அட்டகாசமாக இருக்கும். இந்த துவையல் இட்லி, தோசை, ரசம் சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும்

இனிமேல் இட்லி, தோசைக்கு இப்படி துவையல் செய்து கொடுங்கள். வீட்டில் உள்ளோர் 2 இட்லியை கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு கத்திரிக்காய் எள்ளு துவையல் எப்படி செய்வன்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் எள்ளு துவையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து வைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைத் தெரிங்கள்.இட்லிக்கு தொட்டுக்க அருமையான கத்திரிக்காய் சட்னி - மனிதன்

தேவையான பொருட்கள்:

* கத்திரிக்காய் – 500 கிராம்

* தண்ணீர் – 1/4 கப்

வதக்கி அரைப்பதற்கு…

* எள்ளு விதைகள் – 1/4 கப்

* தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* பூண்டு – 4 பல் (பொடியாக நறுக்கியது)

* வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 4 (பொடியாக நறுக்கியது)

* நெய் – 1 டேபிள் ஸ்பூன்

* எலுமிச்சை சாறு – 1

தாளிப்பதற்கு…

* நெய் – 1 டீஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* சில்லி ப்ளேக்ஸ் – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் குக்கரில் கத்திரிக்காயைப் போட்டு, அதில் 1/4 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 5 நிமிடம் கத்திரிக்காயை வேக வைத்து இறக்கி, விசில் போனதும், குக்கரைத் திறந்து, கத்திரிக்காயின் தோலை நீக்கிவிட வேண்டும்.

* பின் மிக்சர் ஜாரில் வேக வைத்த கத்திரிக்காயைப் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எள்ளு விதைகளைப் போட்டு பொன்னிறமாக குறைவான தீயில் வைத்து வறுத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை ஈரமில்லாத ஒரு மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சிறிது உப்பு தூவி நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

* வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பின் அதில் சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து மிதமான தீயில் வைத்து 6-7 நிமிடம் தக்காளியை நந்கு மென்மையாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் அரைத்து வைத்துள்ள கத்திரிக்காய் பேஸ்ட்டை சேர்த்து, 2 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

* அடுத்து அதில் எள்ளு பொடியை சேர்த்து, நெய் ஊற்றி கிளறி இறக்கி, எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து கிளறி விட வேண்டும்.

* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதிவ் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து தாளித்து, அதை துவையல் மேல் ஊற்றி, சிறிது எள்ளு விதைகளைத் தூவினால், சுவையான கத்திரிக்காய் எள்ளு துவையல் தயார்.

Related Post

சிங்கப்பெண்ணில் வார்டனை லாக் பண்ணிய மகேஷ்.. கடைசி முயற்சியிலும் தோல்வி அடைந்த அன்பு-ஆனந்தி

Posted by - February 19, 2025 0
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ஒரு வழியாக அன்பு மற்றும் ஆனந்தி காதலிப்பது தெரிந்து விட்டது.     அதே…

நாய்கள் இடதுபுறம் வாலாட்டினால்.. கொலைவெறியாம்!

Posted by - January 19, 2024 0
நாய்கள் நம்மைப் பார்த்து வாலாட்டி னால் அதை அன்பின் வெளிப்பாடாகத்தான் இதுவரை நினைத்துக் கொண்டிருக்கிறோம். இனிமேல் அப்படி பொத்தாம் பொதுவாக நினைத்துவிடாதீர்கள். நாய்கள் வாலாட்டுவதிலும் ஒரு சூட்சுமம்…

ராஜா ராணி 2 சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு…புகைப்படத்தை பகிர்ந்த டீம்!!

Posted by - April 19, 2023 0
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் ராஜா ராணி 2. பிரவீன் பென்னட் இயக்க சித்து மற்றும் ஆல்யா மானசா இருவரும் முதன்முறையாக…

மீண்டும் வெளியாகிறது சூர்யாவின் ‘அஞ்சான்’!

Posted by - October 11, 2025 0
நடிகர் சூர்யா நடித்து, கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம், ‘அஞ்சான்’. லிங்குசாமி இயக்கியிருந்த இந்தப் படத்தைத் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் சமந்தா நாயகியாக…

நடக்கமுடியாத நிலையில் பிரியங்கா.. ஏர்போர்ட்டுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க..

Posted by - June 18, 2025 0
விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளராக இருந்து வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் சமீபத்தில் அவரது காதலர் வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி சில…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *