கடலூரில் “அந்தரத்தில்” தொங்குச்சாமே.. மிட்நைட்டில் ஊசலாடிய 40 உயிர்கள்.. கண்விழித்து பார்த்தால்???

195 0

கடலூர்:

அரசு பஸ் ஒன்று அந்தரத்தில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து, கடலூரே அதிர்ந்து போய்விட்டது.. என்ன நடந்தது நள்ளிரவில்?

சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று கிளம்பி சென்றது.. கிட்டத்தட்ட 40 பேர் அதில் பயணம் செய்தனர். வீரமணி என்பவர் இந்த பஸ்ஸை ஓட்டினார். இவருக்கு 45 வயதாகிறது.

இந்த பஸ் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு, கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சென்னிநத்தம் குறுக்கு சாலை வெள்ளாற்று மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது..கடலூரில் "அந்தரத்தில்" தொங்குச்சாமே.. மிட்நைட்டில் ஊசலாடிய 40 உயிர்கள்.. கண்விழித்து  பார்த்தால்??? | Cuddalore incident and 40 passengers rescued after breaking  the glass in ...

நள்ளிரவு என்பதால், பயணிகள் எல்லாருமே தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ், அந்த பாலத்தின் தடுப்பு சுவர் மீது பலமாக பஸ் மோதியது… சிறிது தூரத்துக்கு தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு சென்று, பஸ்சின் முன்பகுதி மட்டும் பாலத்தில் அந்தரத்தில் தொங்கியப்படி நின்றுவிட்டது.

அந்தரத்தில் பஸ்:

பாலத்தில் பஸ் இடித்துவிட்டதை அறிந்து, தூங்கி கொண்டிருந்த பயணிகள் எல்லாம் அலறி கூச்சல் போட்டார்கள்.. இதனால், பஸ்ஸை விட்டு வெளியே வர முயன்றார்கள்.. அந்த பாலத்திலேயே அந்தரத்தில் பஸ் தொங்கிக்கொண்டிருப்பதை அப்போதுதான் பார்த்தார்கள்.. இதனால் மேலும் பயத்தில் கூச்சல் போட்டார்கள்.. முன்பக்க படிக்கட்டு பாலத்தில் அந்தரத்தில் தொங்கியபடியே இருந்ததால், அவர்களால் உடனடியாக கீழே இறங்கி வரவும் முடியவில்லை.

பதற்றத்தில் கூச்சலிட்டபடியே இருந்தனர்.. இந்த அலறல் சத்தத்தை கேட்டு, பாலத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்கள், பதறியடித்து கொண்டு வந்தார்கள்.. பஸ் பாலத்தில் தொங்கியதால், அவர்களால் உடனடியாக பஸ்ஸில் ஏறி செல்ல முடியவில்லை. எனினும், பஸ்சின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு, பயணிகளை வெளியே மீட்டனர்.

பரபரப்பு:

அதற்குள் தகவலறிந்த சேத்தியாத்தோப்பு போலீஸ் விரைந்து வந்து, பயணிகைளை பத்திரமாக மீட்டனர். பஸ் கீழே விழுந்திருந்தால், மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். ஆனால், அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு, மாற்று பஸ் மூலம் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

மீட்பு வாகனத்தை கொண்டு வந்து, அந்தரத்தில் தொங்கியபடி நின்ற பஸ்சையும் போலீசார் மீட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு

Related Post

வாயை மூடிக்கிட்டிரு… பெண்ணை அதட்டிய அமைச்சர் பொன்முடி

Posted by - March 16, 2023 0
தொடர்ந்து அமைச்சர் பொன்முடி  மக்களிடையே சர்ச்சைக்குரிய வகையில் பேசி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார் .   பேருந்தில் பெண்களுக்கு இலவச திட்டம் தமிழக அரசு கொண்டு வந்திருப்பதை,…

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கவலைக்கிடம்? ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏவுக்கு என்னாச்சு?

Posted by - December 14, 2024 0
காங்கிரஸ் மூத்த தலைவர்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவிகேஸ் இளங்கோவன் உடல்நிலை கவலைக்கிடம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன்…

சர்க்கரை நோயாளிகள்.. எந்த எண்ணெய்யை சமையலுக்கு யூஸ் பண்ணலாம்? நீரிழிவு நோயாளிக்கேற்ற எண்ணெய் இதுவா?

Posted by - November 29, 2023 0
சென்னை: நீரிழிவு நோயாளிகள் என்ன சாப்பிட வேண்டும் என்பதிலேயே பல குழப்பங்களு வந்துவிடும் நிலையில், என்ன எண்ணெய்யை சமைக்கலாம் என்பதில் அதற்கு மேல் குழப்பங்கள் உள்ளன. சர்க்கரை…

10 அமைச்சர்களின் துறை மாற்றம்.. எந்த அமைச்சர் என்ன துறை?

Posted by - December 14, 2022 0
Tamilnadu Ministers department | 10 அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாட்டின் 10 அமைச்சர்களின் துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு…

இந்த முறை இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் – தொப்புள் கொடி விவகாரத்தில் அமைச்சர் மா.சு திட்டவட்டம்

Posted by - October 22, 2024 0
#youtuberirfan #youtube #medical #tngovernment #dmk #admk #bjp மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் யூடியூபர் இப்ரான்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *