1 கப் கடலை மாவும், 3/4 கப் நெய்யும் இருக்கா.. அப்ப இந்த மாதிரி மைசூர் பாக் செய்யுங்க… சூப்பரா இருக்கும்..

215 0

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் வீடுகளில் பலகாரங்களை செய்வோம். நீங்களும் உங்கள் வீட்டில் தீபாவளி பலகாரங்களை செய்ய தொடங்கிவிட்டீர்களா? பொதுவாக ஸ்வீட் என்றதுமே பலரது நினைவிற்கு முதலில் வருவது மைசூர் பாக்காகவே இருக்கும். அதுவும் வாயில் வைத்ததும் கரையும்படியான மைசூர் பாக்கை சாப்பிடவே அனைவரும் விரும்புவோம்.

உங்கள் வீட்டில் உள்ளோர் மைசூர் பாக்கை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் இந்த ஆண்டு தீபாவளிக்கு பலகாரம் செய்யும் போது, மைசூர் பாக்கையும் செய்யுங்கள். மைசூர் பாக் செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது செய்வதற்கு மிகவும் குறைவான பொருட்களே போதும்.

உங்களுக்கு வாயில் வைத்ததும் கரையும்படியான மைசூர் பாக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெய் மைசூர் பாக்கின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.1 கப் கடலை மாவும், 3/4 கப் நெய்யும் இருக்கா.. அப்ப இந்த மாதிரி மைசூர் பாக்  செய்யுங்க... சூப்பரா இருக்கும்.. | Diwail Special Ghee Mysore Pak Recipe -  Tamil BoldSky

தேவையான பொருட்கள்:

* கடலை மாவு – 1 கப்

* எண்ணெய் – 3/4 கப்

* நெய் – 3/4 கப்

* சர்க்கரை – 1 கப்

* தண்ணீர் 1/2 கப்

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியில் நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி லேசாக சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் அதில் பாதியை ஒரு பௌலில் ஊற்றி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் மீதமுள்ள பாதி எண்ணெய் நெய் கலவையை கடலை மாவில் ஊற்றி கட்டிகளின்றி நன்கு மென்மையாக கலந்து கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு அகலமான வாணலியில் 1 கப் சர்க்கரை மற்றும் 1/2 கப் நீரை ஊற்றி கலந்து, அடுப்பில் வைத்து சர்க்கரையை கரைக்க வேண்டும். சர்க்கரை கரைந்ததும், குறைவான தீயில் வைத்து, சர்க்கரை கம்பி பதத்திற்கு வரும் வரை சூடேற்ற வேண்டும்.

* சர்க்கரை பாகு கம்பி பதத்திற்கு வந்ததும், அதில் கரைத்து வைத்துள்ள கடலை மாவை சேர்த்து நன்கு தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

* கடலை மாவானது கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் எடுத்து வைத்துள்ள எண்ணெய் நெய் கலவையை ஊற்றி மிதமான தீயில் வைத்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறி விட வேண்டும்.

* கடலை மாவை வாணலியில் ஒட்டாமல் வர ஆரம்பிக்கும் போது, அடுப்பை அணைத்துவிட்டு, மீண்டும் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

* இறுதியாக ஒரு பாத்திரத்தில் நெய்யை தடவி, அதில் இந்த கடலை மாவை ஊற்றி பரப்பி, 1 மணிநேரம் குளிர வைக்க வேண்டும்.

* அதன் பின் கத்தியால் அதை துண்டுகளாக்கினால், சுவையான நெய் மைசூர் பாக் தயார்.

Related Post

இந்த சீரியலும் முடிகிறதா.. சன் டிவி ரசிகர்களுக்கு அடுத்த ஷாக்

Posted by - April 27, 2024 0
டிவி சேனல்கள் தற்போது போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களாக ஒளிபரப்ப தொடங்கி இருக்கின்றன. அதற்காக தற்போது ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்கள் பலவும் முடிக்கப்படுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இந்த…

சிவகுமார் நடிப்பை நிறுத்த இப்படி ஒரு காரணமா.? சிவாஜி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்தும் வீணா போச்சே!

Posted by - August 30, 2024 0
அந்த காலத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற நடிகர்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் சிவகுமாரின் படங்களும் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்று வந்தது. எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் சிவகுமார்…

வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயம், மைனா நந்தினி செய்த அருமையான செயல்- வைரலாகும் வீடியோ

Posted by - March 14, 2023 0
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன்-மீனாட்சி என்ற தொடர் மூலம் பிரபலமானவர் நந்தினி. அந்த தொடரில் அவரது பெயர் மைனா, அவரது கதாபாத்திரம் நல்ல ஹிட்டடிக்க மைனா நந்தினியாகவே…

சும்மா வாய்க்கு வருவதை சொல்ல கூடாது – ப்ளூ சட்டை மாறனை சாடிய டாப் 10 மூவிஸ் சுரேஷ்குமார்

Posted by - January 6, 2023 0
சன் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற ஒரு நிகழ்ச்சி தான் “டாப் 10 மூவிஸ்”. இந்த நிகழ்ச்சியை சுரேஷ்குமார். இவர் சன் இந்த நடத்தி வந்த…

உடலுக்கு ஆற்றல் தரும் புல்லட் புரூப் காபி

Posted by - March 23, 2023 0
‘பட்டர் காபி’ என்று அழைக்கப்படும் ‘புல்லட் புரூப் காபி’, அதிக கலோரிகள் கொண்ட பானமாகும். இதில் கூடுதல் கொழுப்புச்சத்து சேர்க்கப்படுகிறது. இதனால் அன்றைய நாளுக்குத் தேவையான ஆற்றல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *