அரசாணிக்காய்.. அல்சரை அண்ட விடாது காக்கும் அற்புத காய்.. சர்ருனு உடல்எடை குறையும் பாருங்க.. செம ஜூஸ்

193 0

சென்னை:

அரசாணிக்காய் இருந்தால் போதும்.. அல்சரை நம்மிடம் அண்டவிடாமல் பாதுகாக்கும்.. அந்த அளவுக்கு நன்மைகளை கொண்டதுதான் இந்த அரசாணிக்காய்.

அரசாணிக்காயை, பெரும்பாலும் பரங்கிக்காய் என்பார்கள்.. சாம்பல் பூசணி, சிவப்பு பூசணி, மஞ்சள் பூசணி, சர்க்கரை பூசணி இப்படி என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும்.. இது ஒரு நீர்க்காய் ஆகும். 100 கிராம் காயில் 26 கலோரிகள் இருக்கிறதாம். ஆனால், கொழுப்பு இல்லை.

வைட்டமின் B1, B2, B6, D, C, பீட்டா கரோட்டீன், நார்ச்சத்து, கனிமச்சத்துக்களான பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், காப்பர் மற்றும் ஜிங்க் இப்படி ஏகப்பட்ட சத்துக்கள் இந்த அரசாணிக்காயில் நிறைந்துள்ளன.அரசாணிக்காய்.. அல்சரை அண்ட விடாது காக்கும் அற்புத காய்.. சர்ருனு உடல்எடை  குறையும் பாருங்க.. செம ஜூஸ் | Do you know the Health Benefits of  Parangikkai and Ash Gourd yellow ...

கண் பார்வை:

அரசாணிக்காயில் வைட்டமின் A ஏராளமாக உள்ளதால், கண்பார்வைக்கும், கண் கோளாறுகளை சரிசெய்யவும் உதவக்கூடியது.. இந்த காயில், வைட்டமின்கள் B, C உள்ளதால், உடம்பில் உள்ள சூட்டை குறைத்து, குளிர்ச்சியை தரக்கூடியது.. அதேசமயம், இருமல் இருந்தாலும் இந்த கீரை சாப்பிட்டால் குணமாகும்..

இந்த அரசாணிக்காயில், அதிக நார்ச்சத்தும், குறைவான கலோரியும் உள்ளதால், உடல் எடை குறைப்பவர்களுக்கு பெஸ்ட் காய் இதுவாகும்.. போதாக்குறைக்கு, அளவுக்கு அதிகமான நீர்ச்சத்தும் உள்ளதால், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், இந்த காயை தவறவிடக்கூடாது. இந்த அரசாணிக்காயில் பெக்ட்டின் என்ற வேதிப்பொருள் உள்ளது.. இது கொழுப்பு சத்தை குறைக்கக்கூடியது..

அரசாணிக்காய்:

வெறும் 100 கிராம் அரசாணிக்காயை நன்றாக கழுவி, தோலுடன் சேர்த்து ஜூஸ் போட்டு, வெறும் வயிற்றில் குடித்தாலே எந்த நோயும் நெருங்காது என்கிறார்கள்… இதனால், உடலிலுள்ள நச்சுக்கள் வெளியேறுவதுடன், உடல் எடையும் குறையும்..

தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள், ஒரு டம்ளர் அரசாணிக்காயில் ஜூஸ் தயாரித்து, அத்துடன் தேன் கலந்து குடித்து வந்தால் நன்றாக தூக்கம் வரும்.. தீப்புண்களை ஆற்றும் தன்மை இந்த குளிர்ந்த காய்க்கு உள்ளது.. அதேபோல கொப்புளங்களையும் குணப்படுத்தும்.. பித்தத்தை போக்கும் குணம் இந்த அரசாணிக்காய்க்கு உண்டு..

தலைமுடி வளர்ச்சி:

குளிர்ச்சி அதிகம் என்பதால், இந்த காயை ஜூஸ் போல அரைத்து, தலைக்கு தடவி குளிக்கலாம். இதனால், தலைமுடி கொட்டுவது நிற்கும்.. சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் 3 வேளை என 10 நாட்களுக்கு அரசாணிக்காயில் ஜூஸ் தயாரித்து, அரை டம்ளர் குடித்துவந்தாலே, சிறுநீரக கோளாறுகள் நீங்கும்.. ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பும் நீங்கும். இதனால், மாரடைப்பு வருவது தடுக்கப்படுகிறது.

இந்த காயை அடிக்கடி சமையலில் சேர்த்து வந்தால், உடலிலுள்ள பித்தம் போக்கும், பசியை தூண்டும், சிறுநீர் பெருகும்.. மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்று பொருமல் இப்படி பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும். பசியை தூண்டுவதுடன், குடல் சம்பந்தமான பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்யும்.. உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு அருமருந்துதான் இந்த அரசாணிக்காய்.

ஆரோக்கிய விதைகள்:

இந்த அரசாணிக்காயின் விதைகளும் சத்துக்கள் நிறைந்தது.. இந்த காயின் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி பெறும்.. இந்த விதைகளிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதய ஆரோக்கியம் காக்கப்படுகிறது.. அதனால், தினமும் ஒரு டீஸ்பூன் அரசாணிக்காயின் விதையை தினமும் எடுத்து கொண்டால், ஆரோக்கியம் மேம்படும்.. இந்த அரசாணிக்காய் இலைகளிலும் சத்துக்கள் உள்ளது.. இந்த இலைகளையும் சமைக்கலாம்..

இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், ஒருசில எதிர்மறை விளைவுகளையும் இந்த காயில் உள்ளது என்கிறார்கள்.. அதாவது, இந்த பரங்கிக்காய், உடலில் கெட்ட ரத்தத்தை தோற்றுவிக்கக்கூடியதாம்.. வாத குணமும் உள்ளது. பலமற்றவர்களும், நோயுற்று இளைத்தவர்களும், நோயாளிகளும் இதை சாப்பிட்டால், உடம்பை மேலும் உருக்கிவிடுமாம். அதனால், நோயுற்று உடல் மெலிந்தவர்கள் இந்த பரங்கிக்காயை சாப்பிட வேண்டாம் என்பார்கள்.. எனினும், இதுகுறித்து உறுதியாய் தெரியவில்லை.

Related Post

75 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் : சட்டப்பேரவையில் வெளியான முக்கிய அறிவிப்பு

Posted by - June 26, 2024 0
  2026 ஜனவரி மாதத்துக்குள் அரசுதுறைகளில் 46,584 பணியிடங்களும் சமூகநலத்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்டவற்றில் 30,219 இடங்களும் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 3…

வழுக்கும் கழிவறைகள், பலி வாங்கும் சிறைகள் – சீர்கெட்ட காவல்துறை? கண்கெட்ட சிஎம் ஸ்டாலின்?

Posted by - June 30, 2025 0
 தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தபிறகு லாக்-அப் மரணங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். சிவகங்கையில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை…

சொரியாசிஸ் போல ஏதேனும் தோல் பிரச்சனை இருக்கா? அப்ப வாழைப்பழத் தோலை இப்படி யூஸ் பண்ணுங்க!

Posted by - December 30, 2023 0
சொரியாசிஸ் என்பது ஒரு தோல் நிலை. இது சருமத்தில் செதில் புள்ளிகளை ஏற்படுத்துகிறது. தடிப்புத் தோல் அழற்சிக்கான வாழைப்பழத் தோல்கள் வேலை செய்யக்கூடிய ஒரு நல்ல வீட்டு…

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

Posted by - December 5, 2025 0
தாயுமானவர் திட்டத்தில் டிசம்பர் 6, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் முதியோர் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம்…

இடத்தகராறு காரணமாக வழக்கறிஞர் உள்பட 2 பேர் வெட்டிக் கொலை – தென்காசியில் பரபரப்பு

Posted by - June 30, 2023 0
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையே இடத்தகராறு நிலவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் வழக்கறிஞர் அசோக் குமார்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *