வாழை இலை.. வெயிட் லாஸ் முதல் சரும ஆரோக்கியம் வரை உதவும் அதிசய சாறு.. தலைமுடி வளர்ச்சிக்கு வாழை இலை

202 0

சென்னை:

வாழையிலையில் உள்ள நன்மைகள் ஏராளம்.. இந்த வாழையிலையை அரைத்து பயன்படுத்துவதால், ஏற்படும் நன்மைகள் அதைவிட ஏராளம்.. அவை என்னென்ன தெரியுமா? வாழையிலையில் உள்ள சத்துக்களை லிஸ்ட் போடவே முடியாது.. பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் செம்பு இப்படி பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

கழிவுகள்:

உடலிலுள்ள கழிவுகளை நீக்கக்கூடியது இந்த வாழை.. இதற்கெனவே பிரத்யேகமாக மூலிகை சிகிச்சைதான் வாழையிலை குளியல்.. இதற்கென பிரத்யேகமான முறை உள்ளது..

இந்த குளியல் எடுத்து கொள்வதால், உடம்பிலுள்ள தேவையற்ற நச்சுக்கள் நீங்கி, உடல் எடையை குறைக்க செய்யும்.. உடல் வீக்கத்தை போக்கி, கை, கால்வீக்கத்தைப்போக்க செய்யும்.. நரம்பு மண்டலத்தை பலப்படுத்த செய்யும்.. சிறுநீரக செயலிழப்பை தடுக்க செய்யும்.. புத்துணர்ச்சி மீட்டுத்தரும் தரும்..பொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை  சிகிச்சை... செஞ்சு பாருங்க... | Banana Leaf Benefits for Hair Treatment and  more, You Won't Believe It - Tamil ...

குளிர்ச்சி இலைகள்:

குளிர்ச்சி மிகுதி என்பதால்தான், இந்த இலையை அரைத்து, பலவித நோய்களுக்கு தீர்வாக பயன்படுத்துகிறார்கள்.. இயற்கையான ஆன்டிபயாடிக் என்பதால், எந்தவிதமான அலர்ஜியும் இதனால் ஏற்படாது. குறிப்பாக, கண்களை பாதுகாத்து, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த வாழைதான் உதவுகிறது.. வைட்டமின் A, C, K என வைட்டமின்கள் உள்ளதால், குடற்புண்கள் ஆறுகின்றன.. அதுமட்டுமல்ல, வாழையிலையின் சாறு, நம்முடைய சருமத்துக்கு போதுமான பாதுகாப்பை தருகின்றன. சொறி, சிரங்கு, தீப்புண்கள், எரிச்சல், அரிப்பு போன்ற சரும பிரச்சனைகளுக்கு இந்த வாழையிலை சாறு உபயோகமாகிறது.. வாழையிலையை அரைத்து பூசி வந்தால், இதுபோன்ற தொந்தரவுகள் எல்லாம் நீங்கிவிடும்.. வேனல் கட்டிகளும் உடைந்துவிடும்..

சரும நோய்கள்:

அதேபோல, சரும பொலிவுக்கும் இந்த சாற்றினை பயன்படுத்தலாம்.. வாழையிலையில் அலட்டாயின் என்ற சத்து நிறைந்துள்ளதால், ரோஸ் வாட்டர் அல்லது கற்றாழை ஜெல் அல்லது தயிர் இரண்டையும் சேர்த்து முகத்தில் தடவி வரலாம்.. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், முக சுருக்கத்தை தள்ளிப்போடுகின்றன.. அதேபோல, வாழையிலை சாறை, ஃப்ரிட்ஜில் ஐஸ்கட்டியாகும்வரை வைத்துவிட வேண்டும். பிறகு, அந்த ஐஸ் கட்டிகளை கொண்டு, சருமத்தில் தேய்த்து வந்தாலே, சருமம் மென்மையடையும்.. இந்த சாறில் இருக்கும் உட்பொருட்கள் சூரியக் கதிர்வீச்சிலிருந்து வரும் புற ஊதாக்க கதிர்களின் தாக்கத்தால் ஏற்படுகிற சரும பிரச்சனைகளை தீர்க்க பெரிதும் உதவி செய்யும்.

நல்லெண்ணெய்:

பச்சிளம் குழந்தைகளுக்கு சரும பிரச்சனை என்றாலும், இந்த வாழையிலைதான் மருந்தாகின்றன.. குழந்தையின் உடலில் நல்லெண்ணெய் தேய்த்து, காலை நேரத்தில் சூரிய ஒளி படும்படி, படுக்க வைப்பார்கள். சூரிய ஒளியியிலிருந்து வைட்டமின் D, மற்றும் வாழையிலையிலிருந்து குளிர்ச்சி என இரண்டுமே கலந்து சரும நோயை நீக்கிவிடும்.. அம்மை புண்கள் வந்தாலும், வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தாலே, நிவாரணம் கிடைக்குமாம்.

சருமத்துக்கு உதவுவது போலவே, தலைமுடிக்கும் இந்த வாழையிலை சாறு உதவுகிறது.. தலையில் அரிப்பு, பொடுகு, சூடு கட்டிகள், எரிச்சல் போன்றவை இருந்தாலும், இந்த சாற்றினை தலையில் தேய்த்து ஊறவைத்து குளிக்கலாம்.

தலைமுடி வளர்ச்சி:

இந்த சாற்றிலுள்ள, அஸ்ட்ரிஜெண்ட் மற்றும் அலன்டோயின் பொருட்கள் தலைமுடிக்கு நல்ல நிறத்தையும் தருகின்றன.. வாழை இலை சாற்றை எடுத்து தலையில் மாஸ்க் போட்டும் குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும். அவ்வளவு ஏன்? வாழை இலையில் சாப்பிட்டாலே இளநரை வராமல், தலைமுடி கருப்பாக இருக்குமாம். இவ்வளவு நன்மைகளை தந்தாலும், வாழையிலை சாற்றினை நேரடியாக சருமத்துக்கு பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள். அதனால், டாக்டர்களின் ஆலோசனையை பெற்றே பயன்படுத்த வேண்டும்

Related Post

வேங்கைவயல் சம்பவம் | இன்றுடன் ஓராண்டு நிறைவு: விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை

Posted by - December 26, 2023 0
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது கடந்த ஆண்டு டிச.26-ம் தேதி தெரியவந்தது. இந்தக் கொடுஞ்செயல்…

அ.தி.மு.க. வழக்கில் தீர்ப்பு எப்போது? தொண்டர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரிப்பு..

Posted by - January 6, 2023 0
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆவலாக உள்ளது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமா? அல்லது இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி…

பிடிஆர்-க்கே இந்த நிலைமையா? சட்டசபைக்கு வந்த சங்கதி? தேர்தல் நேரத்தில் ஸ்டாலினுக்கு புது தலைவலி?

Posted by - April 22, 2025 0
சட்டசபையில் இன்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதால் திமுக-வின் உட்கட்சி மோதல் அம்பலமாகியுள்ளது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.…

ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம்… டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு !

Posted by - May 20, 2023 0
டாஸ்மாக்கிற்கு மதுபானம் வாங்க வருபவர்களிடம் ரூ. 2 ஆயிரம் ரூபாய் தாள்களை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் வாடிக்கையாளரிடம் 2,000 ரூபாய்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *