பச்சை பட்டாணி.. வெண்டைக்காயைவிட பெஸ்ட்.. பச்சை பட்டாணியை சாப்பிடறீங்களா? அடேங்கப்பா.. இவ்ளோ இருக்கா?

196 0

சென்னை:

பச்சை பட்டாணியில் உள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா? பச்சை பட்டாணியை நிறைய சாப்பிடறீங்களா? அங்கே தான் பிரச்சனையே.. என்னன்னு பாருங்க.

பொதுவாக, பச்சை காய்கறிகளும், பழங்களும் நன்மைகளை தரக்கூடியவையே.. அந்தவகையில், பச்சை பட்டாணியும் தவிர்க்க முடியாதது.. காரணம், பச்சை பட்டாணியில் பீட்டா குலுக்கன் சத்துக்கள் நிறைய உள்ளன.. இந்த சத்துக்கள்தான், உடலில் கொலஸ்ட்ரால் படிவதை தடுப்பதுடன், உடல் எடையையும் அதிகமாகாமல் தடுத்து விடுகிறது..

சத்துக்கள்:

இந்த பட்டாணியில் வைட்டமின் A, B, C, E, K போன் சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் அனைத்துமே, மனித நலனுக்கு பயன்படுபவை.. சர்க்கரை நோயாளிகளும் இதை ஓரளவு சாப்பிடலாம் என்கிறார்கள்.. காரணம், இந்த பட்டாணியின் கிளைசமிக் இன்டெக்ஸ் அளவு இதில் குறைவாகவே உள்ளது.பச்சை பட்டாணியில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்...!!

இதிலுள்ள இரும்பு சத்தும், தாமிர சத்தும், ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகமாக்குகின்றன.. இதிலுள்ள பொட்டாசியம் சத்து, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.. இதனால் இதய ஆரோக்கியம் பேணப்படுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால், குடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.. எனவே, குறைந்த அளவு கலோரி கொண்ட பட்டாணிகள் உடல் எடை குறைப்பதற்கு தூண்டுகோலாக விளங்குகின்றன.

குழந்தைகள்:
உடல் எடையை குறைப்பதில் இந்த பட்டாணிக்கு பங்கு இருப்பதை போலவே, ஒல்லியாக இருப்பவர்கள் சாப்பிட்டால் சதைப்பிடிப்பு ஏற்படவும் காரணமாக இருக்கிறதாம்..

அந்தவகையில், பலவீனம் குறைந்தவர்கள், உடல்பலம் பெற பட்டாணியை உணவில் சேர்த்து கொள்ளலாம்.. குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு இந்த பட்டாணியை உணவில் சேர்த்து தரலாம்.. வைட்டமின் K நிறைந்த பட்டாணியை சாப்பிடும்போது, குழந்தைகளின் புத்திக்கூர்மையும் அதிகமாகிறது.. வெண்டைக்காயைவிட 3 மடங்கு பாஸ்பரஸ், இந்த பட்டாணியில் உள்ளதால், மூளைளை திறன்பட செயல்பட வைக்கிறது. நினைவுத்திறனும் அதிகரிக்க செய்கிறது.

சரும வறட்சி:
சரும பாதுகாப்புக்கு கவசமாக திகழ்கிறது இந்த பட்டாணிகள்.. உணவில் அடிக்கடி பட்டாணி சாப்பிட்டு வந்தால், சருமம் பொலிவு பெறும்.. சரும வறட்சி அண்டாது.. கொலாஜின் உற்பத்தி அதிகமாகும்.. எலும்புகளின் உறுதிக்கும், செயல்பாட்டுக்கு ஆதாரமாக விளங்கும் கால்சியம், இந்த பச்சை பட்டாணியில் அதிகமதாகவே உள்ளது.. இதனால், எலும்பு சம்பந்தமான நோய்கள் நம்மை நெருங்கவிடாமல் செய்கிறது.

ஆண்டி ஆக்சிடெண்ட்கள் நிறைந்துள்ளதால், புற்றுநோய் போன்ற பெரிய பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கிற இந்த பட்டாணிகள்.. குறிப்பாக, வயிற்று புற்று நோய் செல்களை தாக்கி அழிக்கும் பண்புகள் இந்த பட்டாணிக்கு உண்டு.

நஞ்சு பட்டாணி:

ஆனால், அளவுக்கு மிஞ்சினால், பச்சை பட்டாணியும் நஞ்சுதான்.. ஏனென்றால், இந்த பட்டாணியில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கிறது. இது பெண்களுக்கு அவ்வளாக நல்லதில்லை.. உடலின் மூட்டுகளில் வலியையும், வீக்கத்தையும் உண்டுபண்ணிவிடும்.. எலும்புகளில் அமிலப்படிகங்களையும் உருவாக்கிவிடும்.

அதேபோல, நிறைய பட்டாணி சாப்பிடும்போது, குடல் ஆரோக்கியம் கெட்டுவிடும்.. வாயு, அமிலத்தன்மை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.. அதேபோல, புரோட்டீன் நிறைய உள்ளதால், சிறுநீரகத்தின் செயல்பாடும் பாதிக்கும் என்கிறார்கள்.. இது சில சமயம், சிறுநீரக கற்களையும் ஏற்படுத்திவிடும்.

தவிர்க்க கூடாது:
பச்சை பட்டாணியிலுள்ள பைடிக் அமிலம், உடலிலுள்ள இரும்பு, கால்சியம், துத்தநாகம் போன்ற சத்துக்களையும் உறிஞ்சுகிறதாம். அதற்காக பச்சை பட்டாணியை முற்றிலும் தவிர்த்து விடக்கூடாது.. குறிப்பிட்டு அளவு மருத்துவரின் ஆலோசனையை பெற்று சாப்பிட்டு வரலாம்.

Related Post

தமிழக வெற்றி கழகத்தின் முதல் கூட்டம்.. செயற்குழு உறுப்பினர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் அழைப்பு

Posted by - February 7, 2024 0
நடிகர் விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றி…

விஜயகாந்த் எப்போது மனம் உடைந்து போனார்? அவரது மகனே சொன்ன தகவல்

Posted by - December 29, 2023 0
மறைந்த கேப்டன் விஜயகாந்த் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் எப்போது மனம் உடைந்துபோனார் என்பதை அவருடைய மகன் சண்முக பாண்டியன் ஒருமுறை தெரிவித்திருக்கிறார்.  மறைந்த கேப்டன் விஜயகாந்த்…

ஆடியோ லான்ச் முக்கியமே இல்லைன்னு விஜய் போட்ட முட்டுக்கட்டை..

Posted by - August 9, 2024 0
எப்பொழுதுமே விஜய் புது படங்களின் ஆடியோ லான்ச் திருவிழா போல் கலைக்கட்டும். ஆனால் கோட் படத்திற்கு ஆடியோ லான்ச் வேண்டாம் என்று விஜய்யே இந்த முறை முட்டுக்கட்டை…

ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் ஐடி ரெய்டு… 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை..!

Posted by - April 24, 2023 0
வருமானவரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை…

சென்னையில் இடியுடன் கூடிய கனமழை- காலை 7 மணி வரை நீடிக்கும் என தகவல்

Posted by - August 29, 2023 0
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *