சென்னை:
பச்சை பட்டாணியில் உள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா? பச்சை பட்டாணியை நிறைய சாப்பிடறீங்களா? அங்கே தான் பிரச்சனையே.. என்னன்னு பாருங்க.
சத்துக்கள்:
இதிலுள்ள இரும்பு சத்தும், தாமிர சத்தும், ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகமாக்குகின்றன.. இதிலுள்ள பொட்டாசியம் சத்து, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.. இதனால் இதய ஆரோக்கியம் பேணப்படுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால், குடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.. எனவே, குறைந்த அளவு கலோரி கொண்ட பட்டாணிகள் உடல் எடை குறைப்பதற்கு தூண்டுகோலாக விளங்குகின்றன.
அந்தவகையில், பலவீனம் குறைந்தவர்கள், உடல்பலம் பெற பட்டாணியை உணவில் சேர்த்து கொள்ளலாம்.. குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு இந்த பட்டாணியை உணவில் சேர்த்து தரலாம்.. வைட்டமின் K நிறைந்த பட்டாணியை சாப்பிடும்போது, குழந்தைகளின் புத்திக்கூர்மையும் அதிகமாகிறது.. வெண்டைக்காயைவிட 3 மடங்கு பாஸ்பரஸ், இந்த பட்டாணியில் உள்ளதால், மூளைளை திறன்பட செயல்பட வைக்கிறது. நினைவுத்திறனும் அதிகரிக்க செய்கிறது.
ஆண்டி ஆக்சிடெண்ட்கள் நிறைந்துள்ளதால், புற்றுநோய் போன்ற பெரிய பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கிற இந்த பட்டாணிகள்.. குறிப்பாக, வயிற்று புற்று நோய் செல்களை தாக்கி அழிக்கும் பண்புகள் இந்த பட்டாணிக்கு உண்டு.
நஞ்சு பட்டாணி:
அதேபோல, நிறைய பட்டாணி சாப்பிடும்போது, குடல் ஆரோக்கியம் கெட்டுவிடும்.. வாயு, அமிலத்தன்மை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.. அதேபோல, புரோட்டீன் நிறைய உள்ளதால், சிறுநீரகத்தின் செயல்பாடும் பாதிக்கும் என்கிறார்கள்.. இது சில சமயம், சிறுநீரக கற்களையும் ஏற்படுத்திவிடும்.