விஸ்வரூபம் எடுத்த கோமியப் பிரச்னை – மன்னிப்பு கோரிய திமுக எம்.பி.! என்ன நடந்தது?

203 0

அந்த சொல்லை உள்நோக்கத்துடன் பயன்படுத்தவில்லை, தவறான பொருள் தருவதால், வெளிப்படையாக மன்னிப்புக் கேட்பதாக கூறிய திமுக எம்.பி.

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்காக திமுக எம்.பி. செந்தில்குமார் வெளிப்படையாக மன்னிப்பு கோரினார்.

“கோ மூத்ரா” மாநிலங்களில் பாஜக வெற்றி

டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய, தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து பேசினார். அப்போது, பொதுவாக “கோ மூத்ரா” மாநிலங்கள் என்று அழைக்கப்படும் இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற முடியும் என்று கூறினார். ஆனால், தென்மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானாவில் பாஜகவால் வெற்றி பெற முடியாது என்று பேசினார்.

வெடித்த சர்ச்சை – மன்னிப்பு கோரி எம்.பி.

திமுக எம்.பி. செந்தில்குமாரின் பேச்சுக்கு பாஜக உட்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் பேசிய வீடியோவும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்துடன் பகிரப்பட்டது. இந்நிலையில், தனது கருத்துக்கு திமுக எம்.பி. செந்தில்குமார் வெளிப்படையாக மன்னிப்பு கோரினார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கூறிய போது, தவறான பொருள் அளிக்கும் வகையில், ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.அந்த சொல்லை உள்நோக்கத்துடன் பயன்படுத்தவில்லை என்று திமுக எம்.பி. செந்தில்குமார் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அது தவறான பொருள் தருவதால், வெளிப்படையாக மன்னிப்புக் கேட்பதாக செந்தில்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“திமுக எம்.பி.யை கண்டித்து மு.க.ஸ்டாலின்”

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பொதுவெளியில் கருத்துகளை கூறும் போது, நாகரிகத்தையும், பண்பாட்டையும் காக்கும் வகையில் நடந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும், செந்தில்குமாரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாகக் கண்டித்ததாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Post

இயற்கை சீற்றங்களுக்கு மத்தியில் இ.ண்.டி.யா கூட்டணியின் கூட்டத்திற்காக டெல்லி சென்ற CM ஸ்டாலின்…

Posted by - December 19, 2023 0
இயற்கை சீற்றங்களுக்கு மத்தியில் இண்டியா கூட்டணியின் கூட்டத்திற்காக டெல்லி சென்ற முதலமைச்சர்.. பிரதமருடனான சந்திப்பில் நேரம் மாற்றம்! வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…

அமைச்சர் உதயநிதிக்கு தெலுங்கானா முதல்வர் கண்டனம்!

Posted by - April 20, 2024 0
சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த்…

கள்ளக்காதலனுக்கு மனைவியை திருமணம் செய்து வைத்து ஆசி வழங்கிய கணவன்

Posted by - July 8, 2023 0
பீகார் மாநிலம் நவாடா பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருடைய கணவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில்…

வரலாற்றை மாற்றும் ஆம் ஆத்மி..! அதள பாதாளத்தில் காங்கிரஸ்..!

Posted by - December 8, 2022 0
டெல்லி சட்டசபைத் தேர்தல், பஞ்சாப் சட்டசபை தேர்தல், டெல்லி மாநகராட்சி தேர்தல் என அடித்து ஆடி வரும் ஆம் ஆத்மி, தற்போது குஜராத், இமாச்சல் பிரதேசம் தேர்தல்களிலும் கவனம்…

உலகின் மிகவும் மாசுபட்ட 50 நகரங்களில் 39 நகரங்கள் இந்தியாவில் உள்ளன: ஆய்வறிக்கையில் தகவல்

Posted by - March 14, 2023 0
புதுடெல்லி: உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் பட்டியலை சுவிட்சர்லாந்தின ஐக்யுஏர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 131 நாடுகளில், 30,000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *