EBயை ஆதாருடன் இணைக்கவில்லையா? மின் கட்டணம் செலுத்த அவகாசம்… மின்சார வாரியம் அறிவிப்பு..

323 0

ஆதார் எண்ணை இணைக்காதவர்களால் மின் கட்டணம் செலுத்த இயலவில்லை.

ஆதார் எண்ணை இணைக்காத மின் நுகர்வோர், மின் கட்டணம் செலுத்துவதற்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக மின் நுகர்வோர்களுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து, அதை சரிபார்த்த பிறகே இணையவழியிலும், நேரடியாகவும் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஆதார் எண்ணை இணைக்காதவர்களால் மின் கட்டணம் செலுத்த இயலவில்லை. இந்நிலையில் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 24 முதல் நவம்பர் 30ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த வேண்டிய தாழ்வழுத்தப் பிரிவு மின்நுகர்வோர்களுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.மேலும் ஆதார் இணைக்காமல் உள்ள நுகர்வோருக்கு மட்டுமே இவ்வாறு அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அவர்களுக்கு அபராத கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Related Post

உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்…

Posted by - March 25, 2025 0
வாணியம்பாடி அருகே தேர்வுக்காக காத்திருந்த 12-ம் வகுப்பு மாணவி, நிறுத்தத்தில் அரசுப் பேருந்து நிற்காமல் வேகமாக சென்றதால், அதை பின் தொடர்ந்து சென்று பேருந்தில் ஏறிய வீடியோ…

சிபிஎஸ்இ பள்ளிகள் கையெழுத்து கேட்கும்; பெற்றோர் போடாதீங்க! எச்சரிக்கும் அன்பில் மகேஸ்

Posted by - May 2, 2025 0
சிபிஎஸ்இ பள்ளிகளின் ஃபெயில் நடைமுறைக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சிபிஎஸ்இ 5ஆம்…

மிச்சாங் புயல் வெள்ள பாதிப்பு: 4 மாவட்டங்களுக்கு மின்வாரியம் புதிய அறிவிப்பு

Posted by - December 14, 2023 0
மிச்சாங் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. நகரப்பகுதிகளில் வெள்ளம் வடிந்து உடனடியாக…

75 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் : சட்டப்பேரவையில் வெளியான முக்கிய அறிவிப்பு

Posted by - June 26, 2024 0
  2026 ஜனவரி மாதத்துக்குள் அரசுதுறைகளில் 46,584 பணியிடங்களும் சமூகநலத்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்டவற்றில் 30,219 இடங்களும் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 3…

முருகன் மாநாட்டால் திமுக அதிர்ச்சி – அதிமுக வாய் திறக்காது ஏன்? அடுக்கடுக்கான கேள்வி

Posted by - June 23, 2025 0
பாஜகவின் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயல்பாட்டினை, திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜகவின் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயல்பாடு,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *