கொடிபசலைக்கீரை.. கொட்டி கொட்டி கொடுக்கும் நன்மைகள்.. பளபள சருமத்துக்கு கைகொடுக்கும் கொடிபசலை இலைகள்

234 0

சென்னை:

கொடிபசலை கீரைகளின் நன்மை என்ன தெரியுமா? சரும பாதுகாப்புக்கு எப்படியெல்லாம் இந்த கீரையின் சாற்றினை பயன்படுத்தலாம் தெரியுமா?

சிகப்பு, பச்சை என்று 2 வகையான கொடி பசலைகளுமே உடலுக்கு நன்மை தரக்கூடியவை.. இந்த கீரைகளை போலவே, இதன் தண்டுகளிலும் நிறைய சத்துக்கள் உள்ளன. இரண்டிலுமே நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகமாகும். இதைத்தவிர, வைட்டமின் A, B, சுண்ணாம்பு, இரும்பு போன்ற சத்துக்கள் உள்ளன.கொடிபசலைக்கீரை.. கொட்டி கொட்டி கொடுக்கும் நன்மைகள்.. பளபள சருமத்துக்கு  கைகொடுக்கும் கொடிபசலை இலைகள் | Do you know the Amazing Health Uses of  Kodipasalai and ...எனவே, ரத்தம் சுத்தமாவதுடன், ரத்த விருத்தி அதிகமாகி ஹீமோகுளோபின் பிரச்சனை தீரும். நார்ச்சத்து நிறைந்த தாவரம் என்பதால், மலச்சிக்கலும் தீரும்.. இதனால், குடல் ஆரோக்கியமும் காக்கப்படும்.

சரும பாதுகாப்பு: சரும பாதுகாப்பை தருவதில், கொடிபசலைக்கு பெரும்பங்கு உள்ளது.. கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வரும்போது, முகம் பொலிவு பெறும், சருமம் பளபளப்பாகும். வீக்கம், கட்டிகள் இருந்தாலும், இந்த கீரையின் சாறு பயன்படுத்தி வரலாம்.

பாலுணர்வை தூண்டக்கூடிய கீரை என்பதால், மருத்துவத்தில் பெரும்பாலும் சிகிச்சைக்கு பயன்படுத்துகிறார்கள்.. உடலிலுள்ள உஷ்ணத்தை தவிர்த்து, குளிர்ச்சி தரக்கூடிய கீரை..

சிறுநீர் பிரச்சனை: அதனால்தான், சிறுநீர் பிரச்சனை என்றால், இந்த கீரையை வேகவைத்து சூப் போல குடிக்க சொல்வார்கள்.. ஆனால், சளி, இருமல், காய்ச்சல் நேரத்தில் இந்த கீரையை தவிர்த்துவிடலாம். கர்ப்பிணிகளுக்கு இந்த கீரையை சமைத்து தந்தால், வயிற்றை சுற்றி இருக்கும் திரவம் சுத்தமாகும்…

கொடி பசலைக்கீரை சாறில், ஒரு ஸ்பூன் எடுத்து அதில், கற்கண்டு சேர்த்து குழந்தைகளுக்கு தந்து வந்தால் நீர்க்கட்டு குணமாகும். அதேபோல, கொடி பசலைக்கரையுடன் மல்லிவிதை, சீரகம் சேர்த்து கஷாயம் போல குடித்து வந்தால் மலச்சிக்கல் தீர்ந்து விடும்.. கொடி பசலை கீரையுடன் விளக்கெண்ணெய், மஞ்சள் சேர்த்து வதக்கி கட்டினால், எவ்வளவு பெரிய கட்டிகள் என்றாலும் பழுத்து உடைந்துவிடும்..

பாதாம்பருப்பு: இந்த கொடி பசலைக்கீரையை உளுந்து ஊற வைத்த தண்ணீர் சேர்த்து அரைத்து குடித்து வந்தால், பெண்களுக்கு எற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும். கொடிபசலைக்கரை சாறுஎடுத்து, அதில் பாதாம் பருப்பை ஊறவைத்து உலர்த்தி பொடி செய்து, பசும்பாலில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் விந்தில் உயிரணுக்ககளின் எண்ணிக்கை அதிகரிக்கும். பல நன்மைகளை பெற்றுத்தரும் இந்த கொடிபசலையை, மருந்தாக உட்கொள்ளும்முன்பு, மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற வேண்டும்.

Related Post

ஒரே “பட்டை” போதுமே.. ஆச்சரியத்தை அள்ளி அள்ளி தரும் இந்த மரத்து பட்டை.. பெஸ்ட் “வலி நிவாரணி” பவுடர்

Posted by - December 30, 2023 0
சென்னை: முருங்கை மரத்தை போலவே, வேப்ப மரத்தை போலவே, தவிர்க்கவே முடியாதது ஆலமரம்.. இந்த மரத்தின் மொத்த பாகங்களுமே நன்மைகளை தரக்கூடியது.. அந்தவகையில், ஆலமரத்தின் பட்டைகளின் ஒருசில…

கனமழை எச்சரிக்கை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், சென்னை உட்பட 8 மாவட்டங்களில் இன்று மழை: வானிலை மையம் தகவல்!

Posted by - November 13, 2025 0
“சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டம் உட்பட 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்…

திமுக-அதிமுக பங்காளிங்க, எனக்கு மச்சான் விஜய் தான்.. தளபதிக்கு ஸ்கெட்ச் போடும் பெரும் தலை

Posted by - August 21, 2024 0
தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலிலேயே அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் சட்டமன்ற தேர்தல் தான் அவரது தொடக்கமாக இருக்கிறது.…

2023: ரத்னவேலு முதல் ஜாக்கி பாண்டியன் வரை – நடிப்பால் வசீகரித்த வில்லத்தனங்கள்!

Posted by - December 27, 2023 0
எல்லா கதைகளும் பிரச்சினைகளாலும் அதனை உருவாக்கும் எதிர்மறை கதாபாத்திரங்களாலும் மட்டுமே சுவாரஸ்யம் பெறுகின்றன. ‘ஹீரோ’வை ஹீரோவாக்குவதே பலமான வில்லன் கதாபாத்திரம்தான். அவர்களின் அழுத்தமான நடிப்பு பிரச்சினையின் தீவிரத்தை…

நகைப் பிரியர்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்..!

Posted by - March 18, 2023 0
1/ 5 தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் சரிவு நிலையை கண்டது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2/ 5 நேற்று தங்கம் விலை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *