மூக்கிரட்டை இலை.. சிறுநீரக நோய்களை விரட்டியடிக்கும் மூலிகை நண்பன்.. அருமையான மூக்கிரட்டை கீரை சூப்

225 0

சென்னை:

சிறுநீரகத்தின் ஆரோக்கியம் காக்கக்கூடியது மூக்கிரட்டை கீரைகள்.. இந்த கீரையின் மற்ற பயன்கள் என்னென்ன? சத்தான மூக்கிரட்டை ரசம் எப்படி செய்வது தெரியுமா?மூக்கிரட்டையை, மூக்கரட்டை கீரை என்பார்கள்.. சிறுநீரகத்தின் பாதுகாவலன் என்று சொல்லலாம். இந்த செடிகளின் வேர்கள்கூட மருந்தாக சிகிச்சைகளில் பயன்படுகிறது.. வேர்களை காயவைத்து, பொடிசெய்து, சுடுநீரில் குடித்து வந்தால், கண்கள் சம்பந்தமான நோய்கள் தீர்ந்துவிடும்.

சிறுநீரகம்:

சிறுநீரகத்துக்கு பேருதவி செய்யக்கூடிய இந்த கீரைகள், ரத்தத்தில் அதிகரிக்கும் யூரியா மற்றும் கிரியேட்டினின் அளவை குறைக்க உதவுகின்றது.. ரத்த விருத்தி அடைய வேண்டுமானால், இந்த மூக்கிரட்டை கீரையை கூட்டு போல செய்து சாப்பிடுவார்கள்.. எப்போதுமே மூக்கிரட்டை கீரையை உணவில் எடுத்துகொள்ளும் போது அதிக காரம் சேர்க்கக்கூடாது என்பார்கள்.. குளிர்ச்சித்தரும் உணவுகளைதான் எடுக்க வேண்டுமாம்.மூக்கிரட்டை இலை.. சிறுநீரக நோய்களை விரட்டியடிக்கும் மூலிகை நண்பன்.. அருமையான  மூக்கிரட்டை கீரை சூப் | Do you know the Excellent Health Benefits of  Mookkirattai Keerai ...

சிறுநீரகம்:

வழக்கமாக, சிறுநீரகத்தில் தொந்தரவு என்றால், இந்த கீரைகளை சுத்தம் செய்து, அதன் தண்டுகளையும் நறுக்கி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அது பாதியாக வரும்வரை சுண்ட காய்ச்சி குடிக்க தருவார்கள். இதனால் சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும், அது உடைந்து கரைந்துவிடும்.. சிறுநீரகத்தில் தொற்றுநோய்கள் இருந்தாலும், இந்த கீரை குணப்படுத்திவிடும்.. மஞ்சள் காமாலை என்றால், கீழாநெல்லியுடன் இந்த மூக்கிரட்டையை சேர்த்து மருந்தாக தருவார்கள். அதேபோல, மூக்கிரட்டை இலைகளை சுத்தம் செய்து, விழுதாக அரைத்து, நெல்லிக்காய் அளவு வாயில் போட்டு விழுங்கி வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால் மூலநோய்களும் நீங்கும்.

உடல் எடை:

உடல்எடை குறைபவர்களுக்கு பெஸ்ட் சாய்ந்த இந்த மூக்கிரட்டை கீரைகள்.. மூக்கிரட்டை பொடி என்றே கடைகளில் விற்கிறார்கள்.. இந்த பொடியையும் உடல் பருமனை குறைக்க பயன்படுத்தலம்.. புற்றுநோய்களை ஏற்படுத்தும் செல்களை அழிக்கக்கூடியது இந்த இலைகள்.. ஆண்மைக்குறைவு மற்றும் விறைப்புத்தன்மையையும் குணப்படுத்தும். மூக்கிரட்டை கீரையில் எப்படி ரசம் வைப்பது தெரியுமா? இந்த கீரையை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில், 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

மூக்கிரட்டை ரசம்:

அதில் சுத்தம் செய்து வைக்கப்பட்டிருக்கும் கீரையை போட்டு கொதிக்க விட வேண்டும். கீரை நன்றாக வெந்ததும், தட்டிய பூண்டு பற்கள், சீரக தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இறுதியில் வடிகட்டி குடித்தாலே, சிறுநீர் கடுப்பு முதல் சிறுநீரக தொற்று வரை பறந்துவிடும். மிகுந்த மருத்துவ குணம் இருந்தாலும், டாக்டர்களின் அறிவுரையோடு இந்த கீரையை எடுப்பது பாதுகாப்பானது..!!

Related Post

சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – உயர் நீதிமன்றம் அதிரடி

Posted by - November 6, 2023 0
எந்த மதத்திற்கு எதிராக பேசுவதற்கும் நீதிமன்றம் அனுமதிக்காது – நீதிபதி. சனாதான ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோர்…

சிபிஎஸ்இ பள்ளிகள் கையெழுத்து கேட்கும்; பெற்றோர் போடாதீங்க! எச்சரிக்கும் அன்பில் மகேஸ்

Posted by - May 2, 2025 0
சிபிஎஸ்இ பள்ளிகளின் ஃபெயில் நடைமுறைக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சிபிஎஸ்இ 5ஆம்…

தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார்!

Posted by - November 23, 2023 0
தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி உடல்நலக்குறைவால் காலமானார். கேரள மாநிலம் பத்தினம்திட்ட பகுதியை சேர்ந்த பாத்திமா பீவி, உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி ஆவார்.…

திமுக- பாஜக கூட்டணியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்…

Posted by - May 29, 2023 0
அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக முதலமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பாஜக-வுடன் திமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக…

நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை

Posted by - January 10, 2025 0
தமிழ்நாடு சட்டப்பேரவையில், ”யார் அந்த சார்” என்ற பேட்சுடன் அதிமுகவினர் வந்த நிலையில் , இன்று திமுகவினர் ”இவன் தான் அந்த சார்” என்ற புகைப்படத்துடன் வந்தது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *