விஜயகாந்த் எப்போது மனம் உடைந்து போனார்? அவரது மகனே சொன்ன தகவல்

334 0

மறைந்த கேப்டன் விஜயகாந்த் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் எப்போது மனம் உடைந்துபோனார் என்பதை அவருடைய மகன் சண்முக பாண்டியன் ஒருமுறை தெரிவித்திருக்கிறார்.  மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஒரு அருமையான நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். அவர் தனது திரைத்துறை வாழ்க்கையில் பல வெற்றிகளைக் கண்டதோடு, தன்னை தேடி வந்தவர்களுக்கு இல்லை என கூறாமல் இயன்ற அத்தனை உதவிகளையும் செய்தார். அத்துடன் 2005 ஆம் ஆண்டு கட்சியை தொடங்கிய அவர், அடுத்த ஆண்டு நடைபெற்ற அதாவது 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலியே விருத்தாசலம் தொகுதியில் நின்றுவெற்றி பெற்றார். அடுத்தடுத்து தேர்தலிலும் வெற்றி பெற்ற விஜயகாந்த், அரசியலில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் வகித்தார். ஆனால், அதே அளவுக்கு அவரது அரசியல் வாழ்க்கையில் சில சோதனைகளையும் அவர் சந்தித்துள்ளார். அவற்றில் ஒன்றுதான் 2012 ஆம் ஆண்டு அதிமுகவுடன் இணைந்த தேமுதிக கூட்டணி உடைந்தது. இந்த கூட்டணி உடைந்ததற்கு பல காரணங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்த்வுக்கும் இடையே ஏற்பட்ட மோதல். சட்டமன்றத்திலேயே விஜயகாந்த் மற்றும் ஜெயலலிதா காரசாரமான வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். நாக்கை கடித்து அதிமுக எம்எல்ஏக்களை மிரட்டினார் விஜயகாந்த். இந்த மோதல் காரணமாக, தேமுதிகவில் இருந்து பல எம்எல்ஏக்கள் விலகி விஜயகாந்துக்கு எதிராக சட்டமன்றத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களாக செயல்பட்டனர். இந்த எம்எல்ஏக்களில் சிலர் விஜயகாந்தின் நண்பர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் விஜயகாந்தை மிகவும் மனம் உடையச் செய்தது. அவர் தனது மகன் சண்முகபாண்டியனிடம், “என் மீது நம்பிக்கை வைத்து தேமுதிகவில் சேர்ந்தவர்கள், என்னை விட்டு விலகிச் சென்றது எனக்கு மிகுந்த வேதனையைத் தந்தது. அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்” என்று கூறியிருக்கிறார். இந்த சம்பவம் விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, விஜயகாந்த் உடல்நலம் குன்றி அரசியல் வாழ்க்கையில் மிக தீவிரமாக ஈடுபட முடியாமல் போனது.

அத்துடன் தேமுதிகவின் மக்கள் ஆதரவு குறைந்து, கட்சியின் நிலைமை மோசமடைந்தது. விஜயகாந்த் தனது அரசியல் வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்தாலும், அவர் ஒருபோதும் தன்னுடைய நம்பிக்கையை இழக்கவில்லை. அவர் எப்போதும் மக்களுக்காக உழைக்கவும், அவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் தயாராக இருந்தார். ஆனால் அவரது உடல்நிலை கடைசி வரை ஒத்துழைக்கவே இல்லை.

Related Post

லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சர் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா?

Posted by - July 18, 2025 0
அஜித்குமார் மரண வழக்கின் தாக்கம் குறைவதற்கு முன்பே, மயிலாடுதுறை டிஎஸ்பி உயர் அதிகாரிகள் மீது அளித்த குற்றச்சாட்டு திமுகவிற்கு பெரும் பின்னடைவை உண்டாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் காவல்துறையால் ஆளுங்கட்சியான…

மும்முனை போட்டிக்கு தயாராகும் அரசியல் களம்!

Posted by - July 5, 2025 0
தமிழக அரசியல் களத்தில் புதிய வரவாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் திமுக அணி மற்றும் பாஜக அணிகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி இல்லை…

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. வானிலை மையம் எச்சரிக்கை

Posted by - May 22, 2024 0
 தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில்…

நீண்ட உறக்கத்திலிருந்து முதல்வர் எப்போது விழிப்பார்..? – அண்ணாமலை விமர்சனம்..!!

Posted by - May 25, 2024 0
நீண்ட உறக்கத்திலிருந்து தமிழக முதல்வர் எப்போது விழிப்பார் ? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது…

அவதியை ஏற்படுத்தப்போகும் அனல்காற்று: என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

Posted by - March 1, 2023 0
நாட்டின் சில பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக வெப்பம் உயர்ந்து காணப்படும் நிலையில், அடுத்து வரும் மாதங்களில் அனல்காற்று அதிக அவதியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. அதுகுறித்த இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *