கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்… தேர்தல் பணிகளை துரிதப்படுத்துங்கள்… நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் அட்வைஸ்

195 0

கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும் – கமல்ஹாசன்

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை தான் பார்த்துக் கொள்வதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் தலைமையில் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய கமல்ஹாசன், நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை தான் பார்த்துக் கொள்வதாகக் கூறினார். தேர்தல் பணிகளை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றும், செயல்படாத நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், கட்சி தலைவராக தான் என்ன செய்ய வேண்டும், கட்சி தலைமை மேல் உள்ள குறைகள் என்ன என்பது குறித்தும் நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் கருத்துகளை கேட்டறிந்தார்.

இதற்கிடையே, செயற்குழுக் கூட்டத்திற்கு பிறகு செய்தயாளர்களை சந்தித்த அக்கட்சியின்  துணைத்தலைவர் மௌரியா, ”  கமல்ஹாசனின் சிந்தனையோடு ஒத்துப் போகக் கூடிய கட்சியுடன் மட்டுமே கூட்டணி  அமைக்கப்படும் என்றும் அவ்வாறு இல்லாத சூழலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயங்கமாட்டோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Related Post

திமுக கைக்கூலி’’ கொதித்தெழுந்த விஜய்!

Posted by - March 26, 2026 0
தவெக பெண் ரசிகைகளை விபச்சாரி என்று விமர்சித்த அரசியல் ஆலோசகர் பொன்ராஜை கடுமையாகச் சாடியுள்ளார் தவெக விஜய். த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிப்பதா என்று அக்கட்சியின் தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்துள்ளதாகவும் அவர்…

“சென்னையில் இளம் திறனாளர்கள் அதிகம்” – சென்னை மாநாட்டில் பிரதமர் மோடி உரை

Posted by - March 5, 2024 0
வெள்ள மேலாண்மையை செய்யாமல் ஊடக மேலாண்மையை செய்கிறார்கள். சிறு குறு தொழில் துறையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது – பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக…

மன்னித்துவிடுங்கள்.. 41 குடும்பத்திடமும் கதறி அழுத விஜய் – மாமல்லபுரத்தில் நடந்தது இதுதான்!

Posted by - October 27, 2025 0
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் மன்னிப்பு கேட்டு அழுதததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக்…

“பவளவிழா பாப்பா… நீ பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா!” – திமுக மீது விஜய் தாக்கு

Posted by - November 13, 2025 0
தவெக-வின் விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாமல், ‘எந்தக் கொம்பனாலும் எங்களை, எங்கள் ஆட்சியை வீழ்த்த முடியாது’ என்று அதிகார மயக்க முழக்கம் செய்வதாக திமுக தலைவரும், முதல்வருமான…

அவர் வருவாரா.? எதிர்பார்ப்பில் எடப்பாடி பழனிசாமி.. பலிக்குமா கணக்கு.?

Posted by - April 15, 2025 0
அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இந்த கூட்டணியை மேலும் வலுப்படுத்த ஒருவரை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாம் அந்த கூட்டணி. அந்த அவர் சிக்குவாரா.? அதிமுக கணக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *