அடிக்கடி சாப்ட் டிரிங்ஸ் குடித்தால்?அதன் விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்

324 0

நாம் அருந்திய 10 நிமிடத்தில் இந்த காஃபின் நமது ரத்த நாளங்களில் ஊடுருவும். இதனால் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு அதிகரிக்கும்.

இன்றைய துரிதமான உலகில் உணவுப் பழக்கம் மற்றும் தூக்கம் போன்றவை மோசமானதாக இருக்கிறது. குறிப்பாக இளம் தலைமுறையினர் இந்த பழக்கங்களை முறையாக பின்பற்றுவதில்லை. ஆரோக்கியமான உணவுகளை தவிர்ப்பது, சரியான நேரத்திற்கு தூங்காமல் இருப்பது என்று பல தவறுகளை செய்கின்றனர். பெரும்பாலான சமயங்களில் கார்பனேடட் பானங்கள் அல்லது காஃபின் பானங்கள் போன்றவற்றை அருந்துகின்றனர். இது தங்களுக்கு உடனடி ஆற்றலை தருவதாக இளைஞர்கள் கருதுகின்றனர். இது ஓரளவுக்கு உண்மை என்றாலும், நீண்ட கால அடிப்படையில் இது நன்மையை தராது.

கார்பனேடட் பானங்களை அருந்துவதன் மூலமாக நம் உடலில் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படுகின்றன என்பது குறித்து அண்மையில் வெளியான ஆய்வு முடிவுகள் நமக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளன.

அதிக காஃபின் கொண்ட பானம் ஒன்றை அருந்தும்போது அதன் பாதிப்புகள் சில நிமிடங்கள் தொடங்கி, பல நாட்கள் வரையிலும் கூட நீடிக்கும். சராசரியாக ஒரு 500 மில்லி கொண்ட குளிர்பானத்தில் 160-200 mg அளவில் காஃபின் அளவு இருக்கும். இது நாம் அருந்துகின்ற ஒரு கப் காஃபியை காட்டிலும் கூடுதலாகும்.

நாம் அருந்திய 10 நிமிடத்தில் இந்த காஃபின் நமது ரத்த நாளங்களில் ஊடுருவும். இதனால் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு அதிகரிக்கும். பானம் அருந்திய அடுத்த 15 முதல் 45 நிமிடங்களில் ரத்த நாளங்களில் காஃபின் அளவு மிகுதியாக இருக்கும். அத்தகைய சூழலில் நம்முடைய எச்சரிக்கை உணர்வு மற்றும் சிந்தனைத் திறன் அதிகரிக்கும்.

பானம் அருந்திய 30 முதல் 50 நிமிடங்களுக்குப் பிறகு நமது ரத்த நாளங்கள் காஃபினை முழுமையாக உறிஞ்சிக் கொள்ளும். அதனால் நம்முடைய ரத்த நாளங்களில் சர்க்கரை மிகுதியாக இருக்கும். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு காஃபின் அளவுகள் குறையும் என்றாலும், அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் என்பது மறையாது.

தோராயமாக காஃபின் பானம் அருந்திய 5 முதல் 6 மணி நேரத்திற்குப் பிறகு, நமது உடல் அதில் பாதி அளவை மட்டுமே வெளியேற்றியிருக்கும். எனினும், நம்முடைய வயது மற்றும் உடல்நிலை போன்றவற்றின் அடிப்படையில் இது மாறும். இறுதியாக 12 மணி நேர முடிவில் காஃபின் தன்மை உடலில் இருந்து முற்றிலுமாக வெளியேறும்.

காஃபின் பானம் அருந்திய பிறகு 12 முதல் 24 மணி நேர இடைவெளிக்குள் உங்களுக்கு தலைவலி, எரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் உருவாகலாம். காஃபின் பாதிப்புகள் முற்றிலுமாக நீங்குவதற்கு தோராயமாக 7 முதல் 12 நாட்கள் ஆகலாம். ஆக, அடுத்தமுறை காஃபின் பானம் அருந்துகின்ற எண்ணம் தோன்றும்போது ஒருமுறைக்கு பலமுறை யோசித்துக் கொள்ளுங்கள்.

Related Post

தக்காளி போல ஜொலிக்கும் சருமத்தை பெற… தக்காளியையும் மஞ்சளையும் ‘இப்படி’ முகத்துல யூஸ் பண்ணுங்க!

Posted by - September 23, 2023 0
அழகான பொலிவான சருமத்தை பெற யார்தான் விரும்ப மாட்டார்கள். ஆண், பெண் என அனைவரும் பொலிவான சருமத்தை பெற வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்கு தங்களால் முயன்ற…

நடிகர் ஜெயம் ரவி குடும்பத்தில் அடுத்து ஹீரோ ரெடி!.. வைரலாகும் அவரது மகனின் புகைப்படம்

Posted by - August 12, 2023 0
ஜெயம் ரவி ஆரம்பத்தில் தனது அண்ணனின் இயக்கத்தில் தொடர்ந்து படங்கள் நடித்துவந்த ஜெயம் ரவி அடுத்தடுத்து மற்ற இயக்குனர்களுடன்படங்களில் நடித்து தனக்கென சினிமாவில் இடம் பிடித்தார். நடிகர்…

ஈரமான ரோஜாவே 2 தொடரை தொடர்ந்து முடிவுக்கு வருகிறது விஜய் டிவியின் முக்கிய சீரியல்- ரசிகர்கள் வருத்தம்

Posted by - November 25, 2023 0
விஜய் டிவி தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியில் நிறைய தொடர்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது, நிறைய இளைஞர்களை கவரும்…

பிறர் மத்தியில் உங்களது மரியாதை உயர வேண்டுமா? எனில் இந்த 5 பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள்!

Posted by - November 12, 2025 0
உங்களின் மரியாதையை உயர்த்தக்கூடிய, நீங்கள் கற்றுக் வேண்டிய 5 முக்கியமான பண்புகளை பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்கவிருக்கிறோம்.. மரியாதை என்பது கேட்டுப் பெறுவது அல்ல. நீங்கள்…

BUNKER-ல் பதுங்கிய பயந்தாங்கோலி.. பாக். பிரதமரை ஓடவிட்ட இந்தியா! ஷெபாஸ் ஷெரீப் கப் சிப்..

Posted by - May 9, 2025 0
பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், ராணுவ தளபதி முனீர் ஆகியோர் வீடுகளின் அருகே இந்தியா குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பகல்ஹாமில் தீவிரவாதிகள் நடத்திய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *