‘இந்தி தெரியாது போடா’ என சொல்லிவிட்டு இப்ப ‘கேலோ இந்தியா’-வாம்… சூடு, சொரணை இல்லாத உதயநிதி – நடிகை விந்தியா விமர்சனம்

250 0

திமுக இளைஞரணி மாநாடு பயனுள்ளதாக இல்லை என்றும், அது சர்க்கஸ் மாநாடு என அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் நடிகை விந்தியா கிண்டலடித்துள்ளார்.

பழனியில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நூத்திஏழாவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் இணை செயலாளர் நடிகை விந்தியா கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது :- பழனியில் முருகப்பெருமான் ஆண்டி கோலத்தின் நிற்கிறார். ஆனால் விடியா தி.மு.க. ஆட்சியில் பழனி வியாபாரிகள் ஆண்டியாக நிற்கிறார்கள். நீதிமன்றம் உத்தரவு காரணமாக சாலையோர வியாபாரிகளின் கடைகளை அகற்றிய விடியா திமுக அரசு, அதே நீதிமன்றம் உத்தரவு போட்டும் அமைச்சர் பொன்முடி சிறப்பு பதவி கொடுத்து மேடையில் அமர வைத்து உள்ளது. இப்போது தெரியவில்லையா..? நீதிமன்றம் உத்தரவு.

அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்குச் சென்றும் அவர் அமைச்சராக தொடர்வார் என்று சொல்கிறார்கள், வரும் வழியில் பழனியில் பல இடங்களில் குப்பைகளாக இருக்கிறது. கேட்டால் சம்பந்தப்பட்ட துறையினர் சுத்தம் செய்யவில்லை என தெரிவிக்கிறார்கள். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும். அப்போது தி.மு.க. உள்பட அனைத்து குப்பைகளையும் நீக்கி தமிழகத்தை சுத்தப்படுத்துவோம்.

சேலத்தில் நடந்த இளைஞரணி மாநாட்டை கின்னஸ்ஸோடு ஒப்பிடுகின்றனர். அது கின்னஸ் அல்ல சர்க்கஸ் மாநாடு. மாநாட்டில் தங்களது குடும்பத்தினரை மாறி மாறி வாழ்த்தியது தான் மிச்சம். ‘இந்தி தெரியாது போடா’ என கூறிவிட்டு, தற்போது ‘கேலோ இந்தியா’ என பெயர் வைத்துள்ளனர்.

நீட் தேர்வை கொண்டு வந்தது திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தான். அப்போது, திமுக காரங்க கைதட்டி சிரித்தார்கள், உதயநிதி நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றாலும் கை தட்டுகிறார்கள். ஜல்லிக்கட்டு தடையை திமுகவும், காங்கிரசும் தான் கொண்டு வந்தது. அப்போதும் திமுக காரர்கள் கைதட்டினார்கள். அப்போதைய அதிமுக தான் ஜல்லிகட்டை போராடி கொண்டு வந்தோம். இப்போது, ஜல்லிக்கட்டு வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லாமல் உதயநிதி அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதும், அரசியல் செய்கிறார்.

இதையும் பார்த்து திமுக காரங்க கை தட்டுகிறார்கள். இப்படி எதுக்கு கை தட்டுறோம் என்றே தெரியாமல் கருணாநதி குடும்பத்திற்கு கை தட்டுறாங்க, இந்த உபிஸ் என விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ” அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் எடுத்த முடிவில் திடமாக இருந்தார். கட்சிக்கு சரியில்லையா, அதை ஒதுக்கி வைத்துவிடுவார். அப்படிதான் டி.டி.வி. தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், பா.ஜனதா என அனைவரையும் ஒதுக்கினார். இதுதான் தலைவர்களுக்கான அழகு. எனவே வரும் காலத்தில் எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். மீண்டும் ஆட்சி அமைக்கும்,” இவ்வாறு பேசினார்.

Related Post

“திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டு கண்கள்…” – விஜய் முன்னிறுத்தும் கொள்கை இதுதான்!

Posted by - October 28, 2024 0
திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் மாதிரி எனவும், ஆனால் எந்த அடையாளத்துக்குள்ளும் சுருக்கிக்கொள்ளக்கூடாது எனவும் விஜய் கூறியுள்ளார். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே தனது…

கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து : தாராபுரம் அருகே பரபரப்பு

Posted by - May 4, 2024 0
காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் யூ டியூபர் சவுக்கு சங்கர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல…

“நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது” புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!

Posted by - January 22, 2025 0
‘இரும்பின் தொன்மை’ எனும் நூல் வெளியிட்டு விழாவில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். என்னவாக இருக்கும் என மக்கள் மத்தியில் பெரும்…

தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு | உங்கள் பெயர் உள்ளதா? முழு விவரம்

Posted by - December 19, 2025 0
தமிழ்நாட்டில் நடைபெறும் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி,…

அமோனியா வாயு கசிவு விவகாரம்… தனியார் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட அரசு உத்தரவு

Posted by - December 27, 2023 0
சென்னை : சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் திடீரென அமோனியம் வாயு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *