என்னதான் தினமும் சப்பாத்தி சுட்டாலும் அதை சாஃப்டான பக்குவத்தில் சுட பலருக்கும் தெரிவதில்லை. ஆனால் அது அவ்வளவு பெரிய இரகசியமும் கிடையாது. மாவு பிசையும்போது சில விஷயங்களை பின்பற்றினாலே போதும் சாஃப்டான சப்பாத்தியை சுடலாம். #chappathi #food #eat #weight
முதலில், நீங்கள் சப்பாத்திக்கு மாவை பிசையும் முன், ஒரு சல்லடை கொண்டு மாவை சலிக்கவும். ஏனெனில் கோதுமை மாவில் அதிக தவிடு அல்லது உமி இருந்தால், சப்பாத்தி காய்ந்துவிடும்.நீங்கள் சப்பாத்திக்கு மாவு பிசையும் போது, எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீர் பயன்படுத்துங்கள். அவ்வாறு தண்ணீர் ஊற்றிய பின் மாவை நீண்ட நேரம் நன்கு அழுத்தம் கொடுத்து பிசையவும். இப்படி செய்வதால் சப்பாத்தி மென்மையாக வரும்.மாவை பிசைவதற்கு முன், அதில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். இதன் மூலம், சப்பாத்தி சுவையும் நன்றாக இருக்கும். மேலும் சப்பாத்தி மென்மையாக மாறும்.மாவை பிசைந்த பிறகு சிறிது நேரம் மூடி வைக்கவும். 5 நிமிடங்களுக்குப் பிறகு, ஈரமான கைகளால் மாவை மீண்டும் ஒரு முறை பிசைந்து, பின்னர் சப்பாத்திக்கான மாவை திரட்டுங்கள்.சப்பாத்தி அதிக நேரம் சுவையாகவும் மென்மையாகவும் வைத்திருக்க விரும்பினால், மோர், தயிர் அல்லது பால் சேர்த்து மாவை பிசையவும். இதனால் சப்பாத்தி மிகவும் மென்மையாக இருக்கும். சில வாழைப்பழமும் சேர்ப்பதுண்டு.சப்பாத்தி சுடும்போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். உதாரணமாக, அதை தோசைக்கல்லில் வைத்து, அதை ஒரு முறை இரண்டு புறமும் சூடாக்கி பின் அதை அப்படியே எடுத்து நேரடியாக தீயில் காட்டினால் நன்கு உப்பி சாஃப்டாக வரும்.