கோவைக்கு பதில் மயிலாடுதுறை? கமல்ஹாசனால் மார்க்சிஸ்ட் கட்சிக்கு வந்த சிக்கல்

167 0

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் சேரும் பட்சத்தில் கோவை தொகுதி ஒதுக்கப்படும் என தகவல்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோயம்புத்தூர் தொகுதிக்கு பதிலாக மயிலாடுதுறை தொகுதியை எடுத்துக் கொள்ள திமுக  வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என கருதப்படும் நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு எட்டப்படாமல் உள்ளது. கடந்த முறை பின்பற்றியதை போல் இந்த முறையும் செயல்படுத்த திமுக முயற்சிக்கும் நிலையில், கடந்த முறை போல் அல்லாமல் இம்முறை கூடுதல் தொகுதிகளை பெற கூட்டணி கட்சிகள் முட்டி மோதுகின்றனர்.திமுக கூட்டணியில் இதுவரை கொங்கு மக்கள் தேசியக் கட்சிக்கு ‘நாமக்கல்’ தொகுதியும், இந்தியன் யூனியன் முஸ்லீக் லீக் கட்சி ‘இராமநாதபுரம்’ தொகுதியும் ஒதுக்கப்பட்டது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சிகள் இடையே தனித்தனியான இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. குறிப்பாக, மார்க்சிஸ்ட் கட்சியை பொறுத்த வரையில் கடந்த முறை போட்டியிட்ட மதுரை மற்றும் கோயம்புத்தூர் தொகுதிகளில் வெற்றிபெற்றது. இம்முறையும் அந்த 2 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.இம்முறை கூட்டணியில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணையும் என கூறப்படுகிறது. அவ்வாறு கமல்ஹாசன் இணையும் பட்சத்தில் அவரது கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும், அதில் ஒன்று கோயம்புத்தூர் தொகுதியாக இருக்கும் என தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இதனால் கடந்த முறை மார்க்சிஸ்ட் கட்சிக்கு இம்முறை கோயம்புத்தூர் தொகுதியை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுஇருப்பினும் மதுரை தொகுதியோடு மயிலாடுதுறை தொகுதியை மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்க தயார் என திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் மார்க்சிஸ்ட் கட்சி மயிலாடுதுறை தொகுதியை ஏற்றுக்கொள்ளுமா? அல்லது வேறு தொகுதியை கேட்டு பேச்சுவார்த்தை நடத்துமா? என்பது விரைவில் தெரிய வரும்

Related Post

அமோனியா வாயு கசிவு விவகாரம்… அறிக்கை வெளியிட்ட நிறுவனம்

Posted by - December 27, 2023 0
சென்னை: சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் திடீரென அமோனியம் வாயு…

முலாம்பழம்.. சர்க்கரை நோயாளியின் “சூப்பர்” சாய்ஸ் பழம்.. வெறும் வயிற்றில் முலாம்பழத்தை சாப்பிடலாமா?

Posted by - January 9, 2024 0
சென்னை: முலாம்பழத்தின் நன்மைகள் என்னென்ன தெரியுமா? முலாம்பழம் ஜூஸ் சாப்பிட்டாலே போதும், ஏகப்பட்ட உபாதைகள் தீரும். வைட்டமின் A, B, C, B1, B6 K, கால்சியம்,…

சிக்கனில் இந்த பாகத்தை ஒருபோதும் சாப்பிடாதீங்க.. இந்த பிரச்சனை இருக்கவங்க தொடவே கூடாது.!

Posted by - December 18, 2024 0
சிக்கனை சிலர் மாதத்திற்கு நான்கு முதல் ஐந்து முறை சாப்பிடுகிறார்கள், மற்றவர்கள் வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் நான்கு முறை சாப்பிடுகிறார்கள். சிலருக்கு சிக்கன் இல்லாமல் ஒரு…

அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?

Posted by - March 20, 2025 0
தமிழ்நாட்டில் கடந்த 2 நாளில் மட்டும் பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இதனால், எதிர்க்கட்சிகள் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற…

TN Rain Alert: கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Posted by - November 22, 2025 0
TN Weather Update Today: தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல். தெற்கு அந்தமான் கடல் பகுதியில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *