விசிக உடன் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படுமா? திமுகவின் மூவ் என்ன?

216 0

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, விடுதலை சிறுத்தைகள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியுடன் திமுக இன்று தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்துகிறது.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே இன்று இரண்டாவது கட்ட பேச்சு நடைபெற உள்ளது. 2 தனித் தொகுதிகளுடன், ஒரு பொதுத் தொகுதியை வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு கையெழுத்தாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும், மனிதநேய மக்கள் கட்சியுடன் முதல்கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக இன்று நடத்துகிறது. இதனிடையே, திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதேபோல, திமுக- மதிமுக இடையே முரண்பாடு இல்லை என்றும், மனதளவில் உடன்பாடு இருப்பதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Related Post

📢 தமிழ்நாடு நிதிநிலை: இலவசங்கள் அதிகரிப்பு – நிர்வாக அதிகாரிகளின் பொறுப்பு என்ன?

Posted by - February 18, 2026 0
📢 தமிழ்நாடு நிதிநிலை: இலவசங்கள், மானியங்கள் – நிர்வாகத்தின் பொறுப்பு என்ன? சென்னை:தமிழ்நாட்டில் சமூகநலத் திட்டங்கள் மற்றும் மானிய செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தின் கடன்…

தவெகவை நோக்கி நகரும் கட்சிகள்… தடுக்க முடியாமல் திணறும் பாஜக!

Posted by - December 27, 2025 0
அ​தி​முக-வுடன் பியூஷ் கோயல் நடத்​திய பேச்​சு​வார்த்​தைக்​குப் பிறகு, கசி​ய​விடப்​பட்ட தொகு​திப் பங்​கீடு குறித்த தகவல்​கள் பெரும் புயலை கிளப்பி, சில கட்​சிகளை தவெக பக்​கம் தடம் மாற…

ஆசிரியர் தகுதித் தேர்வு: கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி! திமுக அரசுக்கு வைத்த கோரிக்கை என்ன?

Posted by - August 12, 2025 0
நிர்வாகத் திறனற்ற திமுக அரசு, நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது – எடப்பாடி பழனிசாமி.…

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

Posted by - August 18, 2025 0
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாதக பொதுக் கூட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. செஞ்சிக்கோட்டையை மராட்டிய மன்னர்கள் ஆண்ட கோட்டை…

வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர் சங்க நிர்வாகிகளை விடுவிக்க பழனிசாமி வலியுறுத்தல்

Posted by - January 13, 2026 0
‘வீட்டுச் சிறை​யில் வைக்​கப்​பட்​டுள்ள இடைநிலை ஆசிரியர் சங்க நிர்​வாகி​களை உடனடி​யாக விடு​தலை செய்ய வேண்​டும்’ என அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *