ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள கைதி 2 படத்தின் சிறப்பான அப்டேட்டை நடிகர் கார்த்தி கொடுத்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆண்டு வெளியான திரைப்படம் கைதி சத்தமின்றி வெளியாகி திரையரங்குகளில் கர்ஜித்த இப்படம் மாபெரும் வெற்றியை தேடித்தந்தது.
கார்த்தி,தீனா,நரேன் உளப்பட பல இளம் நட்சத்திரங்கள் நடித்த இப்படத்தில் நாயககியே கிடைத்தது இருப்பினும் இப்படம் கதை மற்றும் நடிகர்களின் அற்புதமான நடிப்பிற்காக அற்புதமான வெற்றியை தேடித்தந்தது.
இந்நிலையில் இப்படத்தின் 2 ஆம் பாகம் நிச்சயம் வரும் என லோகேஷ் மற்றும் கார்த்தி முன்பே தெரிவித்த நிலையில் தற்போது இப்படத்தின் சிறப்பான தரமான அப்டேட்டை நடிகர் கார்த்தி கொடுத்துள்ளார்.
சென்னை போரூரில் இன்று தனியார் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட கார்த்தி, “டில்லி சீக்கிரம் திரும்பி வருவான். அடுத்த வருடம் நாங்கள் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம்.
லோகேஷும் ‘ரஜினி 171’ படத்தை முடித்துவிட்டு ‘கைதி 2’க்குத்தான் வருவார் என்று நினைக்கிறேன். சீக்கிரம் வருகிறோம்” என்று ஒரு டக்கரான அப்டேட் கொடுத்துள்ளார் நடிகர் கார்த்தி .