உலகம் முழுவதும் திடீரென முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் – பயனர்கள் தவிப்பு.!

219 0

பேஸ்புக்கை விட ரீல்ஸ்கள் நிறைந்த இன்ஸ்டா முடங்கியது பலரையும் ஏமாற்றம் அடைய வைத்தது.

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கியதால், பயனாளர்கள் தவிப்புக்கு ஆளாகினர்.

உலகெங்கும் உள்ள சொந்தங்களை ஒன்றாக இணைத்த பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், நேற்றிரவு திடீரென்று அப்செட் ஆனது.
அதிகாரப்பூர்வ அறிவிப்போ, முன்னெச்சரிக்கையோ எதுவுமின்றி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் திடீரென்று முடங்கியது.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில், கணக்குகள் தானாகவே லாக் அவுட் ஆனதால் பயனாளர்கள் குழப்பத்தின் உச்சத்திற்கு சென்றனர்.

இது தொடர்பாக கூடுதல் விவரம் அறியவும், புலம்புவதற்கும், ஏராளமான பயனாளர்கள் எலான் மஸ்கின் எக்ஸ் பக்கத்தில் குவிந்தனர். அவர்களை வரவேற்ற எலான் மஸ்க், தற்போது அனைவரும் ஏன் இங்கே கூடியிருக்கிறீர்கள் என தெரியும் என்று பதிவிட்டார்.

மேலும் இப்பதிவை உங்களால் படிக்க முடிகிறது என்றால், தங்கள் செர்வர் நன்றாக வேலை செய்கிறது என்று அர்த்தம் என்றும் நக்கல் அடித்தார்.

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை கலாய்த்து பயனாளர்களும் ஏராளமான மீம்ஸ் மற்றும் வீடியோக்களை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டனர். பேஸ்புக்கை விட ரீல்ஸ்கள் நிறைந்த இன்ஸ்டா முடங்கியது பலரையும் ஏமாற்றம் அடைய வைத்தது.

பேஸ்புக், இன்ஸ்டா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் வாட்ஸ் ஆப் செயலியும் சற்று தடுமாறியது. இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறை ஒப்புக் கொண்ட மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூக்கர் பெர்க், சிறிது நேரத்தில் எல்லாம் சரியாகி விடும் என்று கூறினார்.

தகவல் தொழில்நுட்ப சாதனங்களில் இருந்து சற்று விலகி பெற்றோரிடம் அன்பை வெளிப்படுத்துங்கள் என்ற அட்வைஸையும் மார்க் வழங்கினார். சுமார் ஒரு மணிநேரத்திற்கு பிறகு, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா இயல்பு நிலைக்கு திரும்பியது.

சிரமத்திற்கு மன்னிப்பு கோரிய மெட்டோ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாவில் ஏற்பட்ட பிரச்னை சரி செய்யப்பட்டதாக கூறினார்.ரிலாக்ஸாக இருக்க பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சென்ற பயனாளர்கள், தொழில்நுட்பக் கோளாறால் மீண்டும் மன அழுத்தத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

Related Post

குடிபோதையில் ஈபிள் கோபுரத்தின் உச்சியில் படுத்து உறங்கிய அமெரிக்கர்கள்

Posted by - September 1, 2023 0
பிரான்ஸ், பாரிஸிற்கு சுற்றுலா வந்த இரண்டு அமெரிக்கர்கள் ஈபிள் கோபுரத்தின் உச்சியின் படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈபிள் கோபுரம் பொதுவாக காலை 9மணிக்கு சுற்றுலா…

சீனாவில் மீண்டும் கொரோனா போன்ற கொடிய தொற்று பரவும் அபாயம்- நிபுணர்கள் எச்சரிக்கை

Posted by - September 27, 2023 0
பீஜிங்: கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் உருவான கொரோனா என்ற கொடூர நோய் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரை…

1200 அடி உயரத்தில் ஊசலாடிய கேபிள் கார் – 14 மணி நேரத்துக்கு பின் குழந்தைகள் உள்பட 8 பேரும் மீட்பு

Posted by - August 23, 2023 0
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ளது கைபர் பக்துன்வா பிராந்தியம். இது கரடுமுரடான மலைகளும், ஆழமான பள்ளத்தாக்குகளும், நதிகளும், சமநிலைகளும் நிறைந்த ஒரு பிரதேசம் ஆகும். இங்குள்ள பள்ளத்தாக்குகளைக்…

மீண்டும் சீண்டும் பாக்., அமைச்சர் – ”எல்லையில் ஏதாச்சும் செய்வாங்க” கண்டுக்காத இந்தியா

Posted by - October 17, 2025 0
எல்லையில் இந்தியா மோசமாக செயல்படக் கூடும் என்பதால் பாகிஸ்தான் இருமுனை போருக்கு தயாராக வேண்டும் என, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பேசியுள்ளார். தாலிபன்கள் உடனான மோதலுக்கு மத்தியில்…

தடுமாறும் பாகிஸ்தான் அரசு…சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமரிடம் உதவி கேட்ட தற்போதைய பிரதமர்!

Posted by - May 3, 2025 0
 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரிடம், பிரதமர் செபாஸ் செரீஃப் உதவி கேட்டுள்ளார். இந்தியாவுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவத்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *