இனி இவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

200 0

அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கும்  மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் புதிய அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உதவித் தொகை திட்டம் என்ற பெயரில் அரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கடந்தாண்டு முதல் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேர்ந்திருந்தாலும், அந்த மாணவிகளுக்கும்  மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை  வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில்  அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உதவித் தொகை திட்டத்தில் இனி மாதம்தோறும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் பணம் வரவு வைக்க இருப்பது மாணவிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு அறிவிப்புகளை  மாநில,மத்திய அரசாங்கங்கள் அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில் தேர்தல் தேதி இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்பட இருக்கிறது. அந்த அறிவிப்பு வெளியாகும் நிமிடம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். எனவே அதற்கு முன்பாக அறிவிப்பை வெளியிடும் வகையில் ராமாமிர்தம் அம்மையார் உதவித் தொகை புதுமைப் பெண் திட்டத்தில் அரசு உதவி பெறும் பெண்களின் எண்ணிக்கை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உதவித் தொகை திட்டத்தில் இதுவரை 2லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வந்தனர். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பாணை அமலுக்கு வந்தால் மேலும் அதிக கல்லூரி மாணவிகள் பலனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

கோவையில் பிரபலமான பெண் பேருந்து ஓட்டுநருக்கு சிக்கல்… போலீசார் வழக்குப்பதிவு

Posted by - February 7, 2024 0
கோவையின் பெண் பேருந்து ஓட்டுனர் என பிரபலமான சர்மிளா மீது காட்டூர் காவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு…

உருவானது சக்கரம்.. 4 நாளில் புயல்?! வெளுக்கும் மழை-வெதர்மேன்!

Posted by - December 4, 2022 0
தமிழக கடற்கரைரையை நோக்கி இந்திய சீன பகுதியில் இருந்து வரும் சக்கரம்  நான்கு நாட்கள் கழித்து நல்ல மழை கொடுக்க வாய்ப்புள்ளதாக வெதர்மேன் அப்டேட் போட்டுள்ளார். இந்தோ-சீனா பகுதியில் இருந்து உருவாகி…

டெங்குக் காய்ச்சல் – பள்ளி மாணவன் உயிரிழப்பு..!

Posted by - October 31, 2023 0
கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ராஜ் பாலாஜி, பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை அடுத்த பூந்தமல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த…

வாடகை வீட்டுதாரர்கள்.. அப்பார்ட்மென்ட்வாசிகள்.. இந்த 2 மேட்டரையும் மறக்காதீங்க.. சென்னை புயலின் பாடம்

Posted by - December 6, 2023 0
சென்னை: சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாகி வருகின்றன. சென்னையில் பெய்த மழையானது,…

அரையாண்டு விடுமுறை : சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை – பள்ளி கல்வித்துறை அதிரடி

Posted by - December 24, 2022 0
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அசைன்மென்ட் மட்டும் வழங்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என மாவட்ட முதன்மைக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *