டெங்குக் காய்ச்சல் – பள்ளி மாணவன் உயிரிழப்பு..!

193 0

கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ராஜ் பாலாஜி, பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை அடுத்த பூந்தமல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 15 வயது சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 500 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனைகளிலும் டெங்குவிற்கென்று பிரத்யேக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பூந்தமல்லி கபாலி தெருவை சேர்ந்த ராஜ் பாலாஜி என்ற சிறுவன், குமணன்சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ராஜ் பாலாஜி, பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு டெங்கு பாதிக்கப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராஜ் பாலாஜி மேல்சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் திடீரென்று சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். டெங்கு காய்ச்சல் சற்று குறைந்து வந்த நிலையில், உடலில் உப்பு அதிகமாக இருந்ததால், சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிறுவன் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் நீடித்தால் காலம் தாழ்த்தாமல் மருத்துவமனைக்கு சென்று உரிய  பரிசோதனை மேற்கொள்ளுமாறு தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Post

கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து : தாராபுரம் அருகே பரபரப்பு

Posted by - May 4, 2024 0
காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் யூ டியூபர் சவுக்கு சங்கர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல…

இந்தியை படிக்காதே என்று கூறவில்லை, திணிக்காதே என்றுதான் கூறுகிறோம்” ஸ்டாலின் மடல்…

Posted by - February 25, 2025 0
தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்தும், இந்தி திணிப்பிற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் எனக் கூறியும், திமுக தொண்டர்களுக்கு தொடர் கடிதம் ஒன்றை தொடங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.…

பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் ..

Posted by - December 18, 2024 0
திருநெல்வேலியில் வீடு, வீடாகச் சென்று பெண்களின் உள்ளாடைகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் சில இடங்களில் சில…

தமிழ்நாட்டில் உக்கிரமாகப் போகும் போர்.. ஸ்கெட்ச் போடும் அரசியல் கட்சிகள்.. எல்லாம் ஓட்டுக்குத்தான்

Posted by - May 14, 2025 0
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சமூக வலைதளங்கள் மூலமாக பரப்புரைகளை தீவிரப்படுத்த அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல்…

திரைப்படங்கள் வெளியீட்டில் உதயநிதி தலையீடு… எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Posted by - January 21, 2023 0
தமிழ்நாடு போதைப் பொருட்கள் நிறைந்த மாநிலமாக உள்ளது என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அரியலூர் பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *