மக்களவை தேர்தல் எதிரொலி… ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டிற்கு மாற்றப்படுகிறதா? – பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விளக்கம்

257 0

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றாலும், ஐபிஎல் போட்டிகள் இந்தியாவிலேயேதான் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், மார்ச் 22ஆம் தேதி சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் போட்டியுடன் தொடங்கவுள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்டிருந்த ஐபிஎல் அட்டவணை முழுமையாக இல்லாமல் ஏப்ரல் 7ஆம் தேதி வரையிலான போட்டிகளுக்கு மட்டுமே இருந்தது.

நாடு முழுவதும் தேர்தல் நடைபெறுவதால், மீதமுள்ள போட்டிகள் வெளிநாட்டிற்கு மாற்றப்படலாம் எனவும், தேர்தல் தேதி வெளியானவுடன் அதற்கேற்றவாறு தேதிகள் அறிவிக்கப்படும் எனவும் இருவேறு தகவல்கள் பரவின.

தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்திற்கு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தேர்தல் நடைபெற்றாலும், அனைத்து போட்டிகளும் இந்தியாவிலேயே நடைபெறும் என ஜெய் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனால், முழுமையான போட்டி அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

சென்னை ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சிஎஸ்கே சிஇஓ! – தோனி குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

Posted by - May 24, 2024 0
தோனி தனது ஓய்வு குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட கூடும் என்று இணையத்தில் தகவல்கள் பரவி உள்ளன. 2025 ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவார் என்று…

கோட்டையை இழந்த CSK, கோப்பை வரைக்கும் எப்புடி.. தோனியின் மீதே அதிருப்தி வர வைத்த சம்பவம்!

Posted by - April 6, 2025 0
Chennai Super Kings: படம் பிளாப் ஆனா என்ன தல ஸ்கிரீனில் வந்தா மட்டும் போதும். போட்டியில் தோத்தா என்ன தல ஆடிட்டோரியத்துக்கு வந்தா மட்டும் போதும். சென்னை…

ஃபைனலி.. மாஸ் காட்டிய இந்திய அணி – அரையிறுதியில் ஆஸி.,? தெ.ஆப்.,? இங்கி.,? யாருடன் மோதல்?

Posted by - October 24, 2025 0
உலகக் கோப்பை லீக் சுற்றில் நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம், இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. உலகக் கோப்பை புள்ளிப்பட்டியலின் தற்போதைய நிலவரப்படி, அரையிறுதியில் இந்தியா…

‘சிறந்த கிரிக்கெட் வீரராக செயல்பட தோனி உதவினார்’ – டெவோன் கான்வே புகழாரம்

Posted by - April 30, 2023 0
எந்த நேரத்திலும் தோனி பதட்டப்பட மாட்டார். மிகவும் சுதந்திரமாக நாங்கள் விளையாட தோனி அனுமதிக்கிறார். ஒரு வீரருக்கு என்ன தேவையோ அவற்றை தோனி நிறைவேற்றித் தருகிறார். சிறந்த…

பழி தீர்க்க காத்திருக்கும் ரோகித் படை! – பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யுமா தோனி படை..!

Posted by - May 6, 2023 0
 ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு எதிராக 200 ரன்கள் இலக்கை மும்பை அணி எட்டிப் பிடித்து அசத்தியது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *