நெல்லையில் ராகுல்… மதுரையில் அமித்ஷா… தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்கும் தேசிய கட்சி தலைவர்கள்..!

181 0

இரவு 7 மணிக்கு செட்டிபாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து ராகுல்காந்தி கூட்டாக பரப்புரை

தமிழ்நாட்டில் தேர்தலுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இன்று பரப்புரை மேற்கொள்ள வருகை தருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். அதன்படி, ஏப்ரல் 4, 5 ஆம் தேதிகளில் மதுரை, தேனி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அமித் ஷா பரப்புரை மேற்கொள் திட்டமிட்டிருந்தார். ஆனால், கடைசி நிமிடத்தில் அந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.மீண்டும், மாலை 6.10 க்கு மதுரை விமான நிலையம் வரவுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, மாலை 6:20 மணிக்கு மதுரை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசனை ஆதரித்து வாகன பேரணி நடத்த இருக்கிறார். பெரியார் பேருந்து நிலையத்தில் தொடங்கும் பேரணி, நகைக்கடை பஜார் வழியாகச் சென்று இரவு 7.05 மணிக்கு மதுரை விளக்குத்தூணில் நிறைவடைகிறது. இதையடுத்து, இரவு 7:15 மணிக்கு மதுரையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அமித் ஷா செல்லவுள்ளார்.

நெல்லையில் ராகுல் இன்று பரப்புரை

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் இன்று தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். மாலை 3:50 மணிக்கு நெல்லைக்கு வர இருக்கும் ராகுல் காந்தி, மாலை 4 மணிக்கு, நெல்லை பெல் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

ராகுல், மு.க. ஸ்டாலின் ஒரே மேடையில் பரப்புரை

அங்கிருந்து கோவை புறப்படும் ராகுல் காந்தி, செட்டிபாளையத்தில், இரவு 7 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து கூட்டாக பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். கோவை திமுக வேட்பாளர் ராஜ்குமார், பொள்ளாச்சி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளனர். ராகுல் பரப்புரையை யொட்டி 2,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related Post

70 தொகுதிகளில் மட்டும் தீவிரமா வேலை பாக்கப்போகும் திமுக

Posted by - February 12, 2026 0
என்ன காரணம் தெரியுமா? தமிழ்நாட்டில் தாங்கள் பலவீனமாக உள்ளதாக கருதப்படும் 70 தொகுதிகளில் திமுக கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில்…

நாளை முதல் SIR பணிகள் புறக்கணிப்பு: வருவாய்த்துறை சங்கம் அதிரடி அறிவிப்பு! காரணம் என்ன?

Posted by - November 17, 2025 0
அதீத பணி நெருக்கடி காரணமாக SIR பணிகளை புறக்கணிப்பதாக வருவாய்த் துறை சங்கங்கள் அறிவித்துள்ளன. SIR பணிகளை நாளை (நவம்பர் 18) முதல் புறக்கணிக்க உள்ளதாக வருவாய்த்துறை…

பாஜகவுடன் இன்றைக்கும், என்றைக்கும் கூட்டணி இல்லை: அதிமுக தீர்மானம் முழு விவரம்..

Posted by - September 25, 2023 0
இன்று முதல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்கிறது என்று அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின்…

இரட்டை இலை சின்னம் யாருக்கு.? சிதறுமா வாக்குகள்.. திரும்பும் எம்.ஜி.ஆர். கால வரலாறு!?

Posted by - February 3, 2023 0
AIADMK : ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு தனி சின்னத்தில் போட்டியிட்டால் யாருக்கு லாபம்? அதிமுக வாக்குகள் சிதறுமா? இரட்டை இலை சின்னம் முடங்க தான் காரணமாக…

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்!

Posted by - November 27, 2025 0
எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்த நிலையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார். அதிமுகவில் இருந்த எம்ஜிஆர் காலத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *