திமுக தோல்வி அடைந்தால் தான் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்கும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் மெய்யனூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு அங்கு கூடி இருந்த மக்களிடம் எழுச்சியுரையாற்றினார்.அப்போது பேசிய அவர் கூறியதாவது :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொலைநோக்கு சிந்தனை உள்ளதா? திட்டமிடுதல் என்பது திமுக, அதிமுக இரு கட்சிகளுக்கும் கிடையாது . அடுத்த தலைமுறையை காக்க வேண்டுமென்றால் திமுகவை தோற்கடியுங்கள் .
பழைய ஓய்வூதியம் கேட்டு பல நாட்களாக போராடி வரும் தோழர்களுக்கு ஒன்றே ஒன்று மட்டும் சொல்கிறேன் . திமுக தோல்வி அடைந்தால் தான் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்கும் அவர்கள் இருக்கும் காலம் வரை நீங்கள் கேட்டது கனவாகவே இருக்கும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் தேர்தலின் முடிவில் எந்த கட்சி வெற்றிபெற போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.