திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் சமூக நீதி குறித்து பேச யோக்கியதை கிடையாது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

157 0

நீலகிரியில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

செய்தியாளரிடம் பேசிய எல்.முருகன்,

இந்த தொகுதியில் எனக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. திமுக வேட்பாளர் ஆ. ராசா செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு கிளம்புகிறது. கடந்த 10 ஆண்டுகளில் வாக்காளர் அட்டையை கூட நீலகிரிக்கு மாற்றவில்லை.

ஆ. ராசா, சமுதாயத்தை அவமானமாக பேசுகிறார். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியாயமாக இருக்க வேண்டும். அதிகாரிகள் ஒரு சார்பாக நடந்து கொள்கின்றனர். தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் என்னையே சுற்றி சுற்றி வருகின்றனர். ஆ. ராசாவை கண்டுகொள்வதில்லை. அவரது வாகனத்தை முறையாக சோதிப்பதில்லை.

திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் சமூக நீதி குறித்து பேச யோக்கியதை கிடையாது. அருந்ததி மக்களுக்காக இருக்கின்ற ஒரே ரிசர்வ் தொகுதி இந்த நீலகிரி. இங்கு கூட இந்த சமுதாய வேட்பாளரை நிறுத்த முடியவில்லை. இவர் சமூக நீதி குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது. ஆன்மிகத்தில் மக்கள் நம்பிக்கை உள்ளவர்கள். ஆனால் திமுகவினர் ஆன்மிகத்தை அவமானப்படுத்துகின்றனர்.

இந்த தேர்தல் 2 ஜிக்கும், மோடிஜிக்கும் இடையில் நடக்கும் தேர்தல். இப்பகுதி மக்கள் மீது திமுகவினருக்கு அக்கறை இல்லை. பிரிவினைவாதிகளுக்கு இங்கு இடமில்லை. தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையிலான தேர்தல் எனத் தெரிவித்தார்.

Related Post

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நள்ளிரவு 1 மணிக்கு மேல் தடை – காவல்துறை

Posted by - December 28, 2022 0
வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது என தமிழக காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31.12.2022 அன்று மாலை பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாகவும்,…

ஒரே “பட்டை” போதுமே.. ஆச்சரியத்தை அள்ளி அள்ளி தரும் இந்த மரத்து பட்டை.. பெஸ்ட் “வலி நிவாரணி” பவுடர்

Posted by - December 30, 2023 0
சென்னை: முருங்கை மரத்தை போலவே, வேப்ப மரத்தை போலவே, தவிர்க்கவே முடியாதது ஆலமரம்.. இந்த மரத்தின் மொத்த பாகங்களுமே நன்மைகளை தரக்கூடியது.. அந்தவகையில், ஆலமரத்தின் பட்டைகளின் ஒருசில…

வேலூர்: ஒரு குடும்பத்துக்கே கொலை மிரட்டல்?! – திமுக ஒன்றியச் செயலாளர் மீது நில அபகரிப்புப் புகார்

Posted by - December 2, 2022 0
கொலை மிரட்டல் விடுத்து, நிலத்தை அபகரிக்க முயல்வதாக தி.மு.க ஒன்றியச் செயலாளர் மீது ஒரு குடும்பத்தினர் புகார் அளித்திருப்பது, வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. லூர் மாவட்டம், அணைக்கட்டு…

தண்ணிகூட கொடுக்காம கண்டபடி அடிச்சாங்க.. அஜித்குமார் மரணத்தில் நடந்தது என்ன? சகோதரர் கண்ணீர்…

Posted by - July 2, 2025 0
சிவகங்கை காவல்நிலைய லாக்கப்பில் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் விசாரணையில் நடந்த கொடூரத்தை கண்ணீருடன் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட…

திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் – உடல் தானம்

Posted by - March 25, 2025 0
நடிகரும், பிரபல கராத்தே மாஸ்டருமான ஷிஹான் ஹுசைனி, உடல்நலக்க்குறைவால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறப்புக்கு முன்னதாகவே ஷிஹான் ஹுசைனி, தனது உடலை தானம் செய்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஹுசைனி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *