காதலை நிறைவேற்றும் சிவாலயம்!

185 0

தேவாரப் பாடல் பெற்றத் தலங்களில் சோழ நாட்டில் காவிரி வடகரையில் உள்ள 26 வது திருத்தலமாக விளங்கும் இத் திருத்தலம் அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. மன்மதனை எரித்த வரலாறு நடந்த இடம் என்பதால் இத்தலம் பெரும்பாலான மக்களால் காமதகன சிவாலயம் என்றே அழைக்கப் படுகிறது.

தீர்க்கவாகு என்னும் முனிவா், இறைவன் எழுந்தருளியிருக்கும் தலங்களுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். செல்லும் கோவில்களில் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய கங்கை நீரை ஆகாயத்தின் வழியே பெற்று அபிஷேகம் செய்து வந்தார் .
அதாவது , ஒவ்வொரு ஆலயத்தின் முன்னே நின்று நீண்ட தன் கைகளில் கமண்டலத்தை ஏந்தி, வானத்தை நோக்கி நீட்டுவார். கங்கை நீர் கமண்டலத்தில் வரும். அந்தப் புனித நீரைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்து வணங்குவார் .
அப்படியே இந்தக் கோவிலுக்கு வந்த தீர்த்தவாகு முனிவர், இங்கே உள்ள சூல தீர்த்தம் சிறந்தது என்றியாமல் வழக்கம்போல கணகைநீர் பெற கைகளை வானை நோக்கி தூக்கினார் . கங்கை நீர் வருவதற்குப் பதிலாக அவரது கைகள் குறுகின.

ஆலயத்தின் முன்புறமுள்ள திரிசூல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டார். சூலதீர்த்தம் கங்கையை விட புனிதமானது என்பதை அறியாது வழக்கம்போல, கங்கைநீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய முடிவுசெய்து தன் இரு கரங்களையும் ஆகாயத்தை நோக்கி தூக்கினார்.கங்கை நீர் வருவதற்குப் பதிலாக அவரது நீண்ட கைகள் குறுகிப்போயின. உண்மை உணர்ந்த முனிவர் இறைவனை சரணடைந்தார். முதலில் விநாயகரைவணங்கினார் . விநாயகர் அருள் புரிந்தார் . எனவே இங்குள்ள விநாயகர் குறுங்கை விநாயகர் எனப்படுகிறார் . இந்தக் கோவிலும் ‘குறுங்கைத்தலம்’ எனப் பெயர் பெற்றது .

அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை வீரட்டானேஸ்வராக சிவபெருமான்யோகேஸ்வரர் என்ற திருபெயருடன் உற்சவராக அருள்பாலிக்கிறார்.

தனிச் சன்னிதியில் ஆவுடையார் மீது தாமரை இருப்பதும், அவருக்கு அருகில் குறுங்கை முனிவரின் உருவம் இருப்பதும் சிறப்பாகும்.

காமனை எரித்த தலம் என்பதால் காம தகன மூர்த்தியாக விளங்கும் சுவாமி , இடது காலை மடித்து,வலது காலை தொங்கவிட்டு , வலது கரத்தில் அபய முத்திரையும் , இடது கரத்தை மடக்கிய கால் மீது வைத்து அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கிறார் .
ஆண்டுதோறும் , மாசி மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோஸ்தவம் திருவிழாவின் போது , காம தகன விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம் .

மன்மதனை எரித்த தலம் கூடவே மன்மதனை உயிர்ப்பித்த தலம் என்பதால் காதல் நிறைவேறுவதற்கான தலமாக இந்தக் கோயில் திகழ்கிறது. சுயம்பு மூர்த்தியாக ,யோக மூர்த்தியாக விளங்கும் மூலவரை வணங்கினால் உடல்பலம்,மனோபலம் யோகபலம் கிடைக்கும். வேலையில் உயர்வு கிடைக்கும். தொழில் அபிவிருத்தி அடையும். திருமணத் தடை நீங்கி, திருமணம் கைகூடும். சந்தான பாக்கியமும் வாய்க்கும்.நீற்றினை நிறையப் பூசி
நித்தலும் நியமஞ் செய்து
ஆற்றுநீர் பூரித் தாட்டும்
அந்தண னாரைக் கொல்வான்
சாற்றுநாள் அற்ற தென்று
தருமரா சற்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர் போலுங்
குறுக்கைவீ ரட்ட னாரே.
என்ற அப்பர் தேவாரப் பாடலைப் பாடி திருக்குறுக்கை இறைவனைத் துதித்து நலம் பெறுவோம்.

Related Post

ஆர்வம் காட்டும் விஜய்.. முதல் ஆளாக கை கொடுத்த கீர்த்தி சுரேஷ்

Posted by - April 3, 2023 0
கோலிவுட்டின் மாஸ் நடிகராக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் ஒவ்வொரு படங்களையும் அவருடைய ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழா போல் கொண்டாடுவார்கள். தற்போது விஜய் வாரிசு தொடர்ந்து…

காரசாரமான முட்டை சுக்கா… சில நிமிடங்கள் போதும்!

Posted by - February 22, 2024 0
Egg Chukka Recipe – மிளகு தூள் சேர்த்து எவ்வாறு காரசாரமான முட்டை சுக்கா எளிதாக செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள். முட்டை கொண்டு ஆம்லெட், முட்டை…

பூர்ணிமா மற்றும் மாயாவை வறுத்தெடுத்த கமல்.. இதை கவனிச்சீங்களா? கடைசியில் பிக் பாஸ் வைத்த செக்

Posted by - November 27, 2023 0
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்றைய நவம்பர் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் கமல்ஹாசன் பூர்ணிமா மற்றும் மாயாவிற்கு மறைமுகமாக பதிலடி…

ஒரு மனிதன் வாழ்நாளில் இவ்வளவு முறை சிரிக்கிறானா? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ஆச்சரிய உண்மை

Posted by - February 9, 2026 0
ஒரு மனிதன் சிரிப்பது சாதாரண விஷயம் போல தோன்றினாலும், அதற்குப் பின்னால் அறிவியல் ரீதியான பல சுவாரசியமான உண்மைகள் உள்ளன. சமீபத்தில் விஞ்ஞானிகள் வெளியிட்ட ஆய்வு ஒன்று,…

ராஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் குறை கூறவில்லை.. ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்

Posted by - May 18, 2023 0
அட்டக்கத்தி, ரம்மி, பண்னையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஐஸ்வர்யா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *