தமிழ்நாட்டில் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது பரப்புரை – நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

321 0

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான பரப்புரையில் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அனல் பறக்க வாக்கு சேகரித்ததனர். தமிழ்நாடு முழுவதும் அரசியல் களம் கடந்த ஓரிரு வாரம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களின் வருகையால் பாதுகாப்பு கெடுபிடிகளும் அதிகரித்து காணப்பட்டன. இந்த நிலையில், தமிழ்நாடு மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

கடைசி நாளில் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டனர்.தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 76 பெண் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 950 பேர் களம் காண்கின்றனர். கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 54 வேட்பாளர்களும், நாகப்பட்டினத்தில் குறைந்தபட்சமாக 9 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

ஒரே ஒரு மக்களவைத் தொகுதியை கொண்ட புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், அதிமுக தமிழ்வேந்தன், 19 சுயேச்சைகள் உட்பட 26 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Related Post

தாய்க்கு தாஜ்மஹால் வடிவில் நினைவு இல்லம் கட்டிய மகன்

Posted by - June 10, 2023 0
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் . இவரது மனைவி ஜெய்லானி பீவி. இவர்களுக்கு 4 மகள், 1 மகன் உள்ளனர். இவர்…

தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்- காரணம் என்ன?

Posted by - March 3, 2023 0
சென்னை: தமிழகத்தில் வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அதீத காய்ச்சல், உடல் சோர்வால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள…

இனியாச்சும் கவனமா இருங்க – வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு வேதனை தெரிவித்த விஜய்..!!

Posted by - October 8, 2024 0
சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமான படை சார்பில் பிரம்மாண்டமாக நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிப்பதாகவும், இனி வரும் காலங்களில்…

“எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் விடாமல்..” – எஃப்ஐஆரில் வெளிவந்த ஞானசேகரனின் கோர முகம்!

Posted by - December 26, 2024 0
பெரும் பரபரப்பை கிளப்பிய இந்த விவகாரத்தில் பிரியாணி வியாபாரியாக உள்ள ஞானசேகரன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா…

இனிமே தாறுமாறா கரண்ட் பில் உயராது..

Posted by - August 11, 2025 0
தமிழ்நாட்டில் திடீரென வீடுகளில் அபரிமிதமான மின்கட்டணம் வருவதை தடுக்க தமிழக அரசு புதிய நடைமுறையை செயல்படுத்த உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் தற்போது மின்மீட்டர் மூலமாக மின்சார…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *