விழுப்புரம் மாவட்ட அர்ச்சகர் பாஸ்கர் இந்த வருடம் குரு பெயர்ச்சியில் எந்தெந்த ராசிக்கு சிறப்பு இருக்கிறது என்று விளக்கம் அளிக்கிறார்.
இந்த வருடம் 2024 குரு பெயர்ச்சி மே 1ம் (சித்திரை 20 ) தேதி நடைபெற உள்ளது. இந்த பெயர்ச்சியின் போது மேஷ ராசியில் உள்ள கிருத்திகை 1ம் பாதத்தில் இருந்து, ரிஷப ராசியில் உள்ள கிருத்திகை 2ம் பாதத்திற்கு மாலை 5:30 மணி அளவில்குரு பெயர்ச்சியாக உள்ளார். ஆகையினால் 12 ராசிக்காரர்களின் நிலை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஆண்டு முதலில் டாப் ராசிக்காரர்கள் இடத்தை பிடித்துள்ள ராசிகள் : மேஷம், கன்னி, விருச்சகம், மகரம்.இந்த நான்கு ராசிக்கும் இந்தாண்டு நேரம்மிக சிறப்பாக இருக்கும்.
இந்த ஆண்டு நேரம் சற்று சுமாராக இருக்கும்இடத்தைப் பிடித்துள்ள ராசிகள் : ரிஷபம், மிதுனம், கும்பம், மீனம், துலாம், தனுசுசிம்மம், கடகம். இந்த ராசிக்காரர்கள் நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டும். அதாவது இந்த ராசிக்காரர்கள்குரு வழிபாடு செய்தால், நற்பலன்களையும் பெறுவார்கள். மேலும் ஆலங்குடி குருபகவான் கோயிலுக்கு சென்று வரலாம்.
மேலும் வாரம் வாரம் குரு பகவானை நினைத்து வழிபாடு செய்தல் வேண்டும். அது மட்டுமல்லாமல் சித்தர்கள் இடத்திற்கு கூட சென்று வரலாம். அதன் பிறகு வியாழக்கிழமை திருவண்ணாமலை கிரிவலத்திற்கு சென்று, அஷ்ட லிங்கத்தையும் வழிபாடு செய்தால், நற்பலன்களையும் இந்த ராசிக்காரர்கள் பெறுவார்கள். எனவே இந்த எட்டு ராசிக்காரர்களும், கூறிய அனைத்து வழிபாடுகளையும் செய்து, வாழ்வில் குரு பகவானின் அருள் பெற்றுநன்றாக இருங்கள் என அர்ச்சகர் பாஸ்கர் தெரிவித்தார்.