விஜயகாந்தை விரும்பும் அனைவருக்கும் சமர்ப்பணம் – பத்மபூஷன் விருது பெற்றுக் கொண்ட பிரேமலதா

179 0

விஜயகாந்த் சார்பில் அவரது மனைவி பிரேமலதா விருதைப் பெற்றார். அப்போது விஜயகாந்தை நினைவுகூறும் வகையில் சில விநாடிகள் வானத்தை நோக்கினார்.

மறைந்த தேமுதி நிறுவன தலைவர் விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை, அவரது மனைவி பிரேமலதா, குடியரசுத் தலைவர் கையால் பெற்றுக் கொண்டார். பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா, நடிகர் சிரஞ்சீவி, போலியோவால் கை,கால்களை இழந்த நிலையிலும் தொழில் முனைவோராக உருவெடுத்த கர்நாடகாவின் ராஜண்ணாவுக்கும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும்,  132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் வெங்கையா நாயுடு உட்பட 65 பிரபலங்களுக்கு கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த விழாவில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இதில் விடுபட்ட நடிகர் விஜயகாந்த் உள்ளிட்ட பிரபலங்களுக்கான பத்ம விருதுகளை டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

விஜயகாந்த் சார்பில் அவரது மனைவி பிரேமலதா விருதைப் பெற்றார். அப்போது விஜயகாந்தை நினைவுகூறும் வகையில் சில விநாடிகள் வானத்தை நோக்கினார்.  முன்னதாக நியூஸ் 18 தமிழ்நாடுக்கு பேட்டியளித்த பிரமலதா, விஜயகாந்தை விரும்பும் அனைவருக்கும் இந்த பத்ம விருது சமர்ப்பணம் என கூறினார்.இதேபோல், பழம்பெரும் நடிகையுமான வைஜெயந்தி மாலாவிற்கு பத்ம விபூஷன் விருதை குடியரசுத் தலைவர் வழங்கினார். தமிழ்நாட்டை சேர்ந்த பாரம்பரிய  வள்ளிக் கும்மி நடனக் கலைஞர் பத்ரப்பன், ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.போலியோவால் கை, கால்களை இழந்த நிலையிலும் தளராது தனது தன்னம்பிக்கையால் பொறியாளராகவும், தொழில் முனைவோராகவும் உருவாகி பல மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியதுடன் பாராலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்திய கர்நாடகாவின் கே.எஸ். ராஜண்ணாவுக்கு பத்ம ஸ்ரீவிருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.இதனிடையே, பத்ம விருதுகளை பெற்றவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சார்பில் இரவு சிறப்பு விருந்து டெல்லியில் அளிக்கப்பட்டது.

Related Post

மார்கழி மாதம் கோயில்களில் தினம் தினம் பாடல்கள்: ஏன் இது முக்கியம்?

Posted by - December 20, 2025 0
மார்கழி மாதம் தமிழ் கலாச்சாரத்தில் மிகவும் புனிதமான காலம். இந்த மாதத்தில் கோயில்களில் தினமும் பக்தி பாடல்கள் ஒலிக்கின்றன. இதன் பின்னணி, நோக்கம் மற்றும் மக்களுக்கு ஏற்படும்…

18 தலைமை காவலர்கள் பணியிடமாற்றம்!

Posted by - September 30, 2024 0
சேலம் மாவட்டத்தில் 18 தலைமை காவலர்களை பணியிட மாற்றம் செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். தீவட்டிபட்டி, ஓமலூர், தாரமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் மாமூல்…

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? நீங்க எச்சரிக்கையா இருக்கணுமாம்… உங்க சிறுநீரகம் ஆபத்தில் இருக்காம்!

Posted by - November 22, 2023 0
பீன்ஸ் வடிவில் இருக்கும் சிறுநீரகங்கள் உங்கள் உடலில் இருக்கும் மிகவும் முக்கியமான வலிமையான உறுப்பு. இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு…

சேரன் வீட்டில் நிகழ்ந்த திடீர் மரணம்..

Posted by - November 16, 2023 0
சேரன் கடந்த 1997-ம் ஆண்டு வெளிவந்த பாரதி கண்ணம்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் சேரன். பல வெற்றி படங்களை இயக்கிய…

மாதம்பட்டி ரங்கராஜ் மறுமண வழக்கில் வந்த அதிரடி தீர்ப்பு… ஜாய் கிரிசில்டா போட்ட வைரல் பதிவு

Posted by - November 4, 2025 0
மாதம்பட்டி ரங்கராஜ் தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். சினிமா படங்களை தாண்டி சமையல் தொழில் மூலம் தான்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *