add a breaking news banner at the top of the image

CM Vijay Speech: மோசமான நிலையில் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்.. விஜய் அறிவிப்பு!

76 0

CM Vijay First Speech: நான் உங்க குடும்பத்தில் இருந்து வந்த ஒருவன் தான். அப்படித்தான் நான் உணர்கிறேன். நீங்களும் என்னை அப்படி நினைத்ததால் தான் சினிமாவில் மிகப்பெரிய இடம் கொடுத்தீர்க்கள். இப்போது நன்றிக்கடன் செலுத்த அரசியலுக்கு வந்துள்ளேன்.

தமிழ்நாடு அரசு என்ன நிலைமையில் இருக்கிறது என்பது தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிடுவேன் என முதலமைச்சர் vijay தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் புதிய  முதலமைச்சராக விஜய் இன்று பொறுப்பேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பங்கேற்றனர். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், சிடிஆர் நிர்மல்குமார், டி.கே.பிரபு, கீர்த்தனா, அருண்ராஜ், வெங்கட் ரமணன், ராஜ்மோகன் ஆகியோர் அமைச்சராக பதவியேற்றனர். தொடர்ந்து மேடையில் 200 யூனிட் மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு போன்றவை தொடர்பான 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இதனைத் தொடர்ந்து மக்களிடம் பேசிய விஜய், “சினிமாவில் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றி அடைய நினைத்த ஒரு உதவி இயக்குநருக்கு பிறந்த மகன் நான். எனக்கும் வறுமை, பசி என்றால் என்ன என்பது வாழ்க்கையில் நன்றாக தெரியும். நான் மன்னர் பரம்பரையில் இருந்து எல்லாம் வரவில்லை. நான் உங்க குடும்பத்தில் இருந்து வந்த ஒருவன் தான். அப்படித்தான் நான் உணர்கிறேன். நீங்களும் என்னை அப்படி நினைத்ததால் தான் சினிமாவில் மிகப்பெரிய இடம் கொடுத்தீர்க்கள்.

இப்போது அதை விட்டு விட்டு நன்றிக்கடன் செலுத்த அரசியலுக்கு வந்த என்னை நாங்கள் பார்த்துக்கிறோம் என சொல்லி அவ்வளவு அன்பாக, உறவாக என்னை ஏற்றுக் கொண்டீர்கள்.இந்த அரசியல் பயணத்தில் எனக்கு எவ்வளவோ கஷ்டம், அவமானம் இருந்தது.என்னுடன் இருந்த உங்களுக்கும் அதே கஷ்டம், அவமானம் ஏற்பட்டாலும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்னைக்கு சி.ஜோசப் விஜய் என்னும் நான் என்பதை உண்மையாக்கி கொண்டிருக்கிறீர்கள். நான் ஒன்னும் தேவதூதன் இல்லை. சாதாரண வாழ்க்கை வாழ்பவன். அது செய்பவன், இது செய்பவன் என பொய் வாக்குறுதிகளை கொடுக்க மாட்டேன். எது முடியுமோ அதை மட்டுமே செய்வேன். இன்னொரு விஷயமும் தமிழ்நாடு அரசு இருக்கும் நிலைமையை நான் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். கஜானாவை சுத்தமாக துடைத்து வைத்து விட்டு சென்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலைமையில் தான் தவெக அரசு பொறுப்பேற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் நிலைமை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடுவேன். நான் சொன்னதையெல்லாம் படிப்படியாக நிறைவேற்றுவேன். கொஞ்சம் அவகாசம் மட்டும் கொடுங்கள். இது உங்கள் ஆட்சி” என தெரிவித்துள்ளார்.

Related Post

அஜித்குமார் வழக்கு; “சாதாரண கொலை போல் தெரியவில்லை“ நீதிபதிகள் அதிர்ச்சி, அரசுக்கு 2 நாட்கள் கெடு

Posted by - July 1, 2025 0
சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு விசாரணையின்போது தாக்கல் செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையால் நீதிபதிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, 2 நாட்களில் அறிக்கை அளிக்க அரசுக்கு…
cm vijay

TVK Vijay: அதிகாரிகளை கலைத்து போட தயாரான விஜய்..! சென்னை கமிஷ்னர், உளவுத்துறை DIG யார்? அருண்ராஜ் லிஸ்ட்

Posted by - May 6, 2026 0
TVK Vijay: தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றதுமே தலைமை செயலாளர், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட பதவிகளுக்கான புதிய அதிகாரிகள் பட்டியலை தயார் செய்யும் பணிகளை விஜய் முடுக்கிவிட்டுள்ளாராம்.…

”மோன்தா” புயல், சென்னை, காஞ்சி, திருவள்ளூருக்கு ரெட் அலெர்ட், மிக கனமழை – வானிலை அறிக்கை

Posted by - October 27, 2025 0
TN weather Montha Cyclone Update: மோன்தா புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டில் இன்று சென்னை உட்பட4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.…

500 பள்ளிகள் தத்துகொடுப்பது: தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் விளக்கம்

Posted by - January 2, 2025 0
அரசு பள்ளிகளின் வளர்ச்சியில் CSR மூலம் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு இருக்கும் என்று தான் சொன்னோம். தமிழ்நாட்டில் 500 அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு தத்துக்கொடுப்பதாக தகவல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *